நாமக்கல், அக்.16- குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக அரசு மகப்பேரு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை நாமக்கல் மாவட்டத்தில் மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் இரண்டாவது பெரிய மருத்துவ மனையாக உள்ளது .இங்கு சராசரியாக மாதம் 150 பிரசவங்கள் நடைபெறுகிறது. இங்கு மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த அனுராதா என்பவர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ட்ரங்கு ரோட்டில் ஸ்ரீ சிகாமணி மருத்துவமனை என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார். இங்கு பிரசவத்திற்காகவும் கருக்கலைப்புக் காகவும் வரும் பெண்களிடம் சாதுரியமாக பேசி குழந்தைகளை விற்பனை செய்ய இடைத் தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்வதோடு இவரும் பணம் சம்பாதித்து வந்தாக குற்றச் சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு சூரியம்பாளையம் ஆரம்ப சுகா தார நிலையத்தில், பிரசவமான ஒரு பெண் குழந்தையை விற்பது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இதில், சாணார் பாளையத்தைச் சேர்ந்த புரோக்கர் லோகாம் பாள் என்பவர் மூலம் மருத்துவர் அனுராதா, குழந்தையின் பெற்றோரான தினேஷ் நாக ஜோதியை அணுகிய போது, சந்தேகம டைந்த தினேஷ் திருச்செங்கோடு போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, மருத்துவர் அனுராதா இடைத் தரகர் லோகாம்பாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருங் செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை இயக்கு நருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ராஜ்மோகன் திருச்செங் கோடு அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் அரசு மருத்துவமனையில் பணியாற்று பவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரணை மேற் கொண்டார். பின்னர், அரசின் உத்தரவுப்படி அனுராதாவை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மோகன பானுவிடம் வழங்கி னார். முன்னதாக, கைது செய்யப்பட்ட இரு வர் மீதும் 120 (B) 370 (4)ஐபிசி, ஜேஜே Act 81, 87 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் தொடர் புடையவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.