திருப்பூர், ஜன. 25 - ஒன்றிய அரசு சார்பில் நிதிய மைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், ஜி. எஸ்.டி. வரிவிதிப்பில் சீரான நடைமு றையை அமலாக்க வேண்டும், இதில் உள்ள பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக சைமா தலை வர் ஏ.சி.ஈஸ்வரன் சனியன்று ஒன்றிய நிதியமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: திருப்பூர் பனியன் உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தொழில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற னர். பின்னலாடை, விசைத்தறி உள் ளிட்ட ஜவுளித் தொழில் துறையின ருக்கு மிகவும் முக்கியமான நூல் விலையில் ஏற்ற, இறக்கங்கள் அடிக் கடி ஏற்படுகின்றன. பருத்தி நூல் விலை சீராக இருக்கும்படி அமைய மத்திய அரசு ஒத்துழைத்து உதவ வேண்டும். தற்போது வங்கதேச ஆடைகள் அதிகளவில் இறக்குமதியாகி, உள் நாட்டு பனியன் ஆடைகளின் உற் பத்தி மற்றும் விற்பனை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்க தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் ஆயத்த ஆடை மற்றும் துணிகளுக்கு ‘கவுண்ட்டர்வீ லிங் அல்லது ஆண்ட்டி டம்பிங் டூட்டி’ போன்ற வரிகள் அறிவிக்கப்பட் டால், இந்திய ஜவுளி மற்றும் கார் மெண்ட்ஸ் தொழில் துறை காப்பாற் றப்படும். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் சரக்கு வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.,வரிப் பிடித்தம் முறைப்படுத்த வேண்டும். வாகனங்கள் சார்பில் செலுத்தப்ப டாத ஜி.எஸ்.டி., வரியினங்களுக்காக தொழில் நிறுவனங்கள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த சிக்கல்களை களைந்து, சீரான வரிப் பிடித்தம் நடைமுறைப்படுத்த வேண் டும். இதன்மூலம் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினரும் அபராத வரி விதிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடுவர். எனவே மத்திய அரசு அறிவிக்க உள்ள பட்ஜெட்டில், இந்திய ஜவுளித் தொழில் மற்றும் கார்மெண்ட்ஸ் துறையை பலப்படுத்தும் வகை யில் இக்கோரிக்கைகளை பரிசீ லனை செய்ய வேண்டும் என்று தென் னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.