மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய சைமா கோரிக்கை
மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய சைமா கோரிக்கை திருப்பூர், டிச. 10 - திருப்பூர் பனியன் மற்றும் கார்மெண்ட்ஸ் தொழிலுக்கு உதவும் விதத்தில் மின் கட்டண உயர்வை மீண்டும் மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற் பத்தியாளர் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோள்: தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில குடும் பங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வரும் திருப்பூர் பின்ன லாடை தொழிலுக்கு தற்போது மிக நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு வட மாநிலங்களில் இந்த ஜவுளி தொழிலுக்கு ஊக்கம் தரும் வகையில் சலுகைகளும், மின்சார மானியம், முதலீட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அங் குள்ள உற்பத்தியாளர்கள் விலையை குறைத்து விற்பனை செய்கின்றனர். அவர்களுடன் போட்டி போட்டு விற்பனை செய்வது மிக கடினமாக உள்ளது.
எனவே தமிழக அரசு திருப் பூர் பனியன் மற்றும் கார்மெண்ட் தொழிலுக்கு உதவிட வேண் டும். குறிப்பாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சைமா தலைவர் வைகிங் ஏ.சி. ஈஸ்வரன் கேட்டுக் கொண்டிருக் கிறார்.
காசநோய் கண்டறியவதற்காக முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருப்பூர், டிச.10- திருப்பூர் மாநகராட்சி, வார்டு எண்.53, குப்பாண்டபாளை யத்தில் காசநோய் தொடர்பாக நடைபெற்று வரும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும், காசநோய் பரிசோதனை மேற் கொள்ள 100 நாட்கள் (07.12.2024 முதல் 17.03.2025 வரை) முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மற்றும் கிராமம் கிராமமாக துரிதமாக காசநோயாளிகளை கண்டறியவதற்காக மக்கள் இருப்பிடத் திற்கு நேரடியாக சென்று நெஞ்சக நுண்கதிர் படமும், சளி பரிசோதனைகளை மேற்கொள்ள கடந்த டிச.7 ஆம் தேதி நட மாடும் நுண்கதிர் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் - பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டு, குப்பாண்டபாளையத்தில் காசநோய் தொடர்பாக நடைபெற்றுவரும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (காசநோய்) தீனத யாள், 53ஆவது மாமன்ற உறுப்பினர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் படை வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் கேண்டீன் வசதி செய்து தரக் கோரிக்கை
உடுமலை, டிச.10 - எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு தமி ழகம் முழுவதும் கேண்டீன் வசதி ஏற்ப டுத்தி தரக்கோரி முன்னாள் எல்லை பாது காப்பு வீரர்கள் நலச்சங்கத்தினர் திங்க ளன்று ஐ.ஜி அகர்வாலை நேரில் சந் தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் நலனுக்காக மாநில அளவில் கேண் டீன் வசதி சென்னையில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழு வதும் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட வேண் டும் என முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரர்கள் நலச்சங்கம் பல்வேறு முயற்சி களை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி அகர்வாலுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
மேலும், கோவையில் உள்ள எல்லை பாதுக்காப்பு அலுவல கத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். மேற்கு மாவட்டங்களான கரூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவை பகு திகளில் பணியாற்றும் வீரர்களின் அலைச்சல் மற்றும் கால விரயத்தை கருத்தில் கொண்டு, கோவை 136 வது பட்டாலியன் மையமாகக் கொண்டு எல்லை பாதுகாப்பு படை, மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பயன்பெறும் வகையில் கேண்டீன் அமைக்கப்படும் என எல்லை பாது காப்பு படை ஐ.ஜி அகர்வால் உறுதிய ளித்தார்.
மேலும், கேந்திரிய வித்யா லயா பள்ளி அமைப்பதற்கான கோரிக் கையும் முன்வைக்கப்பட்டது. இதை யும் கருத்தில் கொண்டு உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தார். இது தவிர, வருங்காலங்க ளில் சுதந்திர தின விழாக்களில் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்க ளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கவும் ஐ.ஜி அகர்வால் உறுதியளித்தார். இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, திருநெல்வேலி, தூத் துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர் கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் நோய் பரிசோதனை, ஸ்கேன் வசதி செய்து தரக் கோரிக்கை
திருப்பூர், டிச. 10 - தாராபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 மாத சராசரி சர்க்கரை கண்டறியும் பரிசோதனை மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா குழு சார் பில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கனக ராஜ், செவ்வாய் அன்று தாராபுரம் அரசு மருத் துவமனை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வ ரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதா வது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தலைமை மருத்துவமனை நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் பல நூறு பேர் தினசரி வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற சோத னைகள் நடத்த வேண்டிய அவசியம் உள் ளது. சர்க்கரை நோய்க்கு உண்டான மூன்று மாத சராசரியை சோதிக்கக்கூடிய சோதனை வசதி இங்கு இல்லை. ஏ1பிசி என்று சொல்லக் கூடிய மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு பரிசோதனை செய்யக்கூடிய வசதி இங்கே இல்லை. மேலும் ஸ்கேன் வசதி இல்லை. நீண் டகாலமாக ரத்த சுத்திகரிப்பு வசதி இங் கில்லை, அவசர அறுவை சிகிச்சைகள் செய் யப்படுவது இல்லை.
இதற்காக இங்குள்ள நோயாளிகள் திருப் பூர், கோவை என்று செல்லக்கூடிய நிலை அதி கமாக உள்ளது. எனவே தாங்கள் இது குறித்து உரிய முறையில் விசாரணை செய்து ரத்த சுத் திகரிப்பு, சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு, ஸ்கேன் வசதி ஆகிய குறைந்தபட்ச வசதி களை செய்து தர வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
நுகர்வோர் விழிப்புணர்வு போட்டிகள்
அவிநாசி, டிச.10- தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அவிநாசி நுகர்வோர் மன்றம் மற்றும் திருப் பூர் மாவட்ட உணவு பொருள் வழங்கள் பாது காப்பு துறை சார்பில் திங்களன்று விழிப்பு ணர்வு போட்டிகள் நடைபெற்றது.
இதில், நுகர்வோருக்கு பாதுகாப்பு நியாயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் கட் டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட போட்டி கள் நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவி கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் நளதம், நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் அருண், முனைவர் தியாகராஜன், செல்வி, ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
களரி களம் திறப்பு
உடுமலை டிச.10- களரி பயிற்சியில் ஆர்வ முள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி பெறும் வகையில் மடத்துக்குளம் ராஜ வீதியில் பகத்சிங் களரி களம் ஞாயிறன்று திறக்கப்பட்டது.