பள்ளிபாளையம், பிப்.6- கல்வியே ஒருவரை முழு மனிதனாக்கும் என சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தா ளர் ஆயிசா நடராசன் மாணவர்களிடம் உரை யாற்றினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை வித்யாஷ்ரம் பள்ளி மேல்நிலை மாணவர்க ளுக்கான ஆண்டு விழா அண்மையில் நடை பெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங் களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாகித்திய அகாதமி விருது பெற்ற, குழந்தைகள் நூலாசிரியர் ஆயிசா நடராசன் கலந்து கொண்டார். மாணவ தலை வர் வி.கே.அஸ்வத் அனைவரையும் வரவேற் றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளா ளர் மங்கை நடராஜன் விழாவினை துவக்கி வைத்தார். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் எஸ்.ரோஹித் ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆயிசா நடராசன் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், கல்வியே ஒரு மனிதனை முழுமையான மனிதனாக உரு வாக்குகிறது.
ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே, மாணவர்களை ஒழுக்கமுடைய வர்களாக உருவாக்க முடியும். அதனோடு மாணவர்களின் பலவீனத்தையும், பலமாக மாற்றி அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் மதி நுட்பத்தினையும், ஆற்ற லையும் ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். பெற் றோர்களாகிய நீங்களும், பாகுபாடுகளின்றி, உங்கள் பிள்ளைகளின் ஆர்வமும், திறமை யும், எது என்று கண்டறிந்து, அதனை ஊக்கப் டுத்தி அவர்களுக்கு பக்கபலமாகச் செயல் பட வேண்டும். இவ்வாறு உயர்ந்த பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பெற்றிருக்கக்கூடிய மாணவர்களாகிய நீங்கள், உங்களுக்குரிய தனித்துவத்தோடு, தொடர் முயற்சியால் சாத னைகளை நிகழ்த்த வேண்டும். அதற்கு கைபேசியை கல்விக்கும், உங்கள் முன்னேற் றத்திற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்சொன்னபடி பெற்றோர், ஆசிரியர், மாண வர்கள், அதனோடு கல்வி நிர்வாகம் ஆகி யோர் சீராக செயல்படும் போது, நாளைய சிறப்பான சமுதாயத்தினை உருவாக்கி மற்ற வர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண் டும், என்றார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவர் களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. இவ்விழாவில் பாவை கல்வி நிறு வனங்களின் துணைத்தலைவர் டி.ஆர்.மணி சேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல் உள் ளிட்ட முதல்வர்கள், துறைத்தலைவர்கள் பங் கேற்றனர்.