districts

img

சிபிஎம் கொல்லிமலை தாலுகா செயலாளராக எஸ்.தங்கராசு தேர்வு

நாமக்கல், அக்.24- மார்க்சிஸ்ட் கட்சியின் கொல்லிமலை தாலுகா செயலா ளராக எஸ்.தங்கராசு தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கொல்லிமலை தாலுகா  மாநாடு, செம்மேடு வல்வில் ஓரி  கூட்டரங்கத்தில் புதனன்று நடை பெற்றது. செம்மேடு கிளைச் செயலாளர் கே.வி.ராஜ் செங்கொடியை ஏற்றி  வைத்தார். வி.கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே. மாணிக்கம், சி.ரேவதி ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற மாநாட்டில், கிளைச் செயலா ளர் எஸ்.கே.மாணிக்கம் வரவேற்றார். ஒன் றியக்குழு உறுப்பினர் எஸ்.தங்கராசு அஞ்சலி  தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ஜெயமணி துவக்கவுரை யாற்றினார். அறிக்கையை, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் முன்வைத் தார். இம்மாநாட்டில், செம்மேடு அரசு மருத்து வமனையை, மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும். ரி -  சர்வே குளறுபடிகளை சரி செய்து, இணைய  வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 2006 - வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கொல்லி மலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண் டும். விவசாயிகளின் பிரதான விளைப் பொருட்களான காபி,  மிளகு, அன்னாசி உள்ளிட்ட வற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலம், இடைத்தரகர்களின் தலையீடுகளை தடுத்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கொல்லி மலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத் துள்ள நிலையில், மிளகு மற்றும் காபி  உள்ளிட்டவற்றை அரசு நியாய விலைக்கடை கள் மூலம், மாநிலம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் கொல்லி மலை தாலுகா செயலாளராக எஸ்.தங்கராசு  உட்பட 9 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி நிறைவு உரை யாற்றினார். எஸ்.சி.சிவனேசன் நன்றி கூறி னார்.