கோவை, நவ.10- மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நகரச் செயலா ளராக எஸ்.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை வடக்கு நக ரக்குழுவின் 11 ஆவது மாநாடு ஞாயிறன்று சங்கனூர், ஆர்.கே.மண்டபத்தில் தோழர் ஆர்.நாச்சிமுத்து நினைவரங்கில், நடைபெற்றது. நகரக்குழு உறுப்பினர் ஆர்.செல்வம் செங்கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.ரத்தினசாமி வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வடக்கு நகரச் செயலா ளர் ஆர்.சுந்தரம் அறிக்கையை முன்வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஆர்.முருகேசன், வி.சுரேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து வட்டி வசூலிக்க ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக் களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜபுரம் பகுதியில் சாலை சாக்கடை வசதிகளை மேம்படுத்த வேண் டும். சூயஸ் குடிநீர் குழாய் இணைப்பு என்ற பெயரில் சாலைகளை சேதப்படுத்திய தால் பெரும் விபத்துகள் ஏற்ப டுகிறது. குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட சாலைகளை சூயஸ் நிறுவனம் உடனடியாக செப்பனிட வேண் டும். சூயஸ் என்ற அந்நிய கம் பெனியின் குடிநீர் கொள்ளையை தடுக்க வேண் டும். குப்பைக்கு வரி வாங்கும் முறையை கைவிட வேண்டும். மாநக ராட்சி சார்பில் வரி உயர்வு ஒரு வருடத் திற்கு சதம் வீட்டு வரி உயர்வு என்பது மிகவும் ஏழ்மையில் உள்ள மக்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, வீட்டு வரி உயர்வை மாந கராட்சி நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதனைத்தொடர்ந்து, கட்சியின் கோவை வடக்கு நகரச் செயலாளராக எஸ்.நாராயண சாமி மற்றும் 13 நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன் நிறைவுரையாற்றினார். முடிவில், எம்.பழனிச்சாமி நன்றி கூறினார்.