districts

img

சிங்காநல்லூர் நகரச் செயலாளராக எஸ்.மூர்த்தி தேர்வு

கோவை, அக்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகர 11 ஆவது மாநாட் டில் நகர செயலாளராக எஸ்.மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் நகரக்குழு 11 ஆவது மாநாடு ராமானுஜ நகர்ரங்கசாமி திருமண மண்டபம் தோழர்கள் சுப்பையன் - கே.வேலு சாமி வி.சந்துரு நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மா நாட்டிற்கு மூர்த்தி, பிஜு, ரம்யா ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் ஓ.என்.சண்முகம் கட்சி கொடியை ஏற்றினார். நகரக் குழு உறுப்பினர் மா.கிருஷ்ணகுமார் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை நகரக் குழுச் செயலாளர் வி.தெய்வேந்திரன், வரவு செலவு அறிக்கையை ஜோ.பிட்பிஜூ ஆகியோர் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.மனோகரன் உரையாற்றினார்.  மாநாட்டில், எஸ்ஏஎச்எஸ் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகரத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு காண வேண்டும். சிங்காநல் லூர் பேருந்து நிலையத்தில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண் டும், பாதாளசாக்கடைத் திட்டத்தை துரி தப்படுத்திட வேண்டும், கோவை மாநகராட்சி குப்பை வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடவு எண் 3 சூர்யா நகர் மேம்பாலம் கட்டுவதற்கு அரசானை வெளியிட்டு கட்டுமானப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். கோவை மாநக ராட்சி கிழக்கு மண்டலப் பகுதி முழு வதும் தூய்மைப்பணியாளர்களை அதிகப்படுத்தி, மக்களின் சுகாதா ரத்தை உறுதி செய்ய வேண்டும்.  அரசுப்பள்ளிகளில் கழிவறை வசதி களை  உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் 11 பேர் கொண்ட சிங்கை நகரக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. நகர செயலா ளராக எஸ்.மூர்த்தி தேர்வு செய்யப்பட் டார். முடிவில் நகர் குழு உறுப்பினர் வி.சீனிவாசன் நன்றி கூறினார்.