தருமபுரி, அக்.24- மார்க்சிஸ்ட் கட்சியின் நல் லம்பள்ளி ஒன்றியச் செயலாள ராக எஸ்.சின்னராஜி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நல்லம்பள்ளி ஒன்றிய 5 ஆவது மாநாடு, நல்லம்பள்ளி தனியார் திருமண மண்டபத் தில், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் பி.காளி, எஸ்.பழனியம்மாள் ஆகியோர் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ஜெயராமன், செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் கே.எல்லப்பன் வர வேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. நாகராசன் துவக்கவுரையாற்றினார். ஒன்றி யச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜி அறிக் கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார். இதில், மிட்டாரெட்டிஅள்ளியிலிருந்து காளிக்கரம்பு வரை மலைப்பாதை ஏற்படுத்த வேண்டும். நல்லம்பள்ளி பேருந்து நிலை யத்தில் இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண் டும். சேஷம்பட்டி, பாளையம் புதூர், வெள்ளக்கல், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம் பாலம் அமைக்க வேண்டும். வத்தல் மலைக்கு நகர பேருந்து இயக்க வேண்டும். அதியமான் கோட்டையில் உள்ள காலபைர வர் கோயிலுக்கு இலவசமாக தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். ஏரிகளை தூர்வார நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். மிட்டாரெட்டிஅள்ளி பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட மனைப்பட்டாவிற் கான நிலத்தை, அளந்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் நல்லம் பள்ளி ஒன்றியச் செயலாளராக எஸ்.எஸ்.சின்னராஜி உள்ளிட்ட 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து நிறைவுரையாற்றினார்.