districts

img

சிபிஎம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.சந்திரமதி தேர்வு

நாமக்கல், நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளி பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.சந்திரமதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய 6 ஆவது மாநாடு, படைவீடு ஐசிஎல் சிஐ டியு அலுவலகத்தில், தனபால் தலைமை யில் சனியன்று நடைபெற்றது. மூத்த தோழர்  நல்லாகவுண்டர் செங்கொடியை ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை எம்.மணிகண் டன் வாசித்தார். எஸ்.வேலுமணி வரவேற் றார். மாநாட்டினை மாநில செயற்குழு உறுப் பினர் செ.முத்துக்கண்ணன் துவக்கி வைத்து  உரையாற்றினார். நாமக்கல் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.ஜெயமணி, ஏ.டி.கண் ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், வெப்படை மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் செயல்பட்டு வரும் நூற்பாலைக ளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக இஎஸ்ஐ, பிஎப், போனஸ் உள் ளிட்டவை வழங்க வேண்டும். சாயப்பட்டறை களிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய இலந்தக்குட்டை பெதக் காட்டூர் பகுதியில் விவசாய நிலங்களில் சாயக்கழிவு சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது. படைவீடு பேரூராட்சி, உப்புபாளையம் பகுதியில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்துதர வேண்டும். உப்புபாளையத்தில் முறையாக குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும். இளைஞர்க ளின் வாழ்வை சீரழிக்கும் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துகள் விற் கப்படுவதை காவல்துறையினர் இரும்பு கரம்  கொண்டு தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பள்ளி பாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.சந்திரமதி மற்றும் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெரு மாள் நிறைவுரையாற்றினார்.