சேலம், டிச.14- 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிரா மப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். கிராமப்புற அஞ்சலகத்தில் பணியாற்றும் அஞ்சலக ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப் பாக, அஞ்சல் நிலையங்களில் உள்ள ஊழி யர்களுக்கு இணையாக கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். கிராமப்புற அஞ்ச லகங்கள் அனைத்திலும் கணினி வசதி செய்து தரப்பட வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழி யர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூ தியம் உட்பட அனைத்தும் வழங்க வேண்டும். அஞ்சல் ஊழியர்களுக்கு எதிராக நடைபெ றும் அனைத்து விதமான அடக்குமுறைகளை யும் நிறுத்த வேண்டும். தங்கள் சொந்த கைபே சியை அலுவலக வேலைக்கு பயன்படுத்த சொல்வதையும், சமூக ஊடகங்களை பயன்படுத்த சொல்வதையும் நிறுத்த வேண் டும். கிராமப்புற அஞ்சலக ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி முடிவுகளை ஒன் றிய அரசு அமல்படுத்த வேண்டும். 40 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டிச.12 ஆம் தேதியன்று முதல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்டம், கிழக்கு கோட் டத்திற்குட்பட்ட 456க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் திறக்கப்படாததால், கிராமப் புற மக்கள் அஞ்சல் சேவையை பெற முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம், அஞ் சலக வங்கி பரிமாற்றங்கள் செய்யப்படாத தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். இதேபோல் சேலம் தெற்கு கோட்டத்திலும் அஞ்சலக பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சல கங்கள் முழுவதும் செயல்படாததால் பணி கள் முழுமையாக பாதிப்பு அடைந்துள் ளது. கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறை வேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என வும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்துள்ள னர். இந்நிலையில், சேலம் கோட்டை மைதா னத்தில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங் கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் மோகன், விஸ்வநாதன், செயலாளர்கள் பிரபாகரன், சங்கரலிங்கம், பொருளாளர்கள் ஜெயந்தன், தமிழ்ச்செல்வன் மற்றும் ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி கே.ஆர்.கணேசன், நேதாஜி சுபாஷ் ராமு, சண்முகம் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.