கோவை, டிச.3- தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வலியுறுத்தி பி.ஆர்.நடராஜன் எம்.பி., தலைமையில் சனியன்று கோவை ரயில் நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு அதிகம் உள்ளனர். இவர்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் பேருந்துக ளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள் ளது. அதேசமயம் பண்டிகை காலத்தில் தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பெரும்பா லான தொழிலாளர்கள் அதிக கட்டணத்திற்கு தனியார் பேருந்துகளை நாடுகின்றனர்.
இத னால், தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்கினால் தொழிலாளர்கள் பயனடை வார்கள். ஆனால், அதனை நிறைவேற்ற மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சனியன்று கோவை ரயில் நிலையத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட் சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், விசிக மண் டல செயலாளர் சுசி கணேசன், மதிமுக நிர் வாகி சேதுபதி, ஆதித்தமிழர் பேரவையின் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் சக்திவேல், தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழக முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய முஸ் லிம் முன்னேற்ற கழக மாநில பொறுப்பாளர் ஆர்.எம்.ரபி, கோவை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட 33 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., செய்தியார்களிடம் கூறுகையில், காசில்லா மல் பயணிக்க காசிக்கு ரயில் இயக்கும் ஒன் றிய அரசு, காசு கொடுத்து தென்மாவட்டங் களுக்கு பயணிக்க ரயில்கள் இயக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. எனவே, கோவை யிலிருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், தென்காசி, மதுரை, நாகர்கோவில் போன்ற தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலை யங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வழியாக பொள்ளாச்சிக்கு மெமு ரயில் இயக்க வேண்டும். சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில் களும் நின்று செல்ல, தென்னக ரயில்வே மற் றும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.