சேலம், பிப்.26- சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் சந்தேகத்திற்கிடமான வகை யில் சுற்றித்திரிந்த முதியவரிடமி ருந்து ரூ.62லட்சத்தை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர். சேலம் புதிய பேருந்து நிலை யத்தில், பள்ளபட்டி காவல் நிலைய முதன்மை காவலர்கள் சுகவனம், லோகநாதன் ஆகியோர் கண்காணிப் பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதியவர் ஒருவர் பையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சந் தேகப்படும் படியாக சுற்றிக்கொண் டிருந்தார். இதையடுத்து சந்தே கத்தின் பேரில் அவரை மடக்கி, அவர் வைத்திருந்த பையை போலீ சார் சோதனை செய்தபோது ஒரு பண்டல் இருந்தது. சந்தேகமடைந்த காவல் துறையினர் அந்த முதிய வரை பையுடன் அழைத்துக் கொண்டு பள்ளப்பட்டி காவல் நிலை யம் வந்தனர். அந்த பண்டலை திறந்து பார்த்த காவல் துறையினர் அதிர்ச்சி யடைந்தனர். உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. விசாரணையில் அவரது பெயர் பால கிருஷ்ணன் (59) என்பதும், அவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறை மெயின் ரோடு, குமலன் குட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் உதவி ஆணையர் சரவணகுமரன், ஆய்வா ளர் ராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில், தான் தங்க வியா பாரம் செய்து வருவதாகவும், விற் பனை செய்த தங்கத்திற்கான பணத்தை வசூலித்து செல்வதாக வும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், பணத்திற்கான ஆவணங் கள் எதுவும் இல்லாததால் சந்தே கமடைந்த காவல் துறையினர் உயர திகாரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்து பணத்துடன், வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டப்பட்டது. இதன்பின் சேலம் வருமான வரித்துறை ஆய்வா ளர் ராஜாராம் மற்றும் தங்கபாலன் ஆகியோரிடம் 62,12,120 ரூபாயுடன் பாலகிருஷ்ணன் ஒப்படைக்கப்பட் டார். வருமான வரித்துறை அதிகாரி கள் கைப்பற்றப்பட்ட பணத்தின் ஆவ ணங்கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.