districts

தருமபுரியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக- சிபிஎம்

தருமபுரி, ஏப்.15- தருமபுரியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி ‌மாவட்டக்குழு  வலியுறுத்தியுள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,கேரள மாநிலத்திலிருந்து கோவை, திருப் பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக பெங்களூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணி கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தங்கள் சாகுபடி நிலங்களில் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இண்டூர், பாலவாடி பகுதியில் விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற கரியப்பன அள்ளி கிராமத்தைச்சேர்ந்த விவசாயி கணேசன் தனது நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து வியாழனன்று தற் கொலை செய்துகொண்டார்.  கெயில் நிறுவனத்தின் அடாவடிதனத்தால் தற்கொலை  செய்து கொண்ட விவசாயியின் இறப்பிற்கு நீதி கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத் தில் பங்கேற்றோரை அழைத்துப் பேசிய மாவட்ட நிர்வாகம்  விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக் குறுதி அளித்துள்ளது. எனவே, விவசாய விளை நிலங்களில் எரி வாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். நெடுஞ்சாலையை ஒட்டி குழாய் பதிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இறந்துபோன விவசாயியின் குடும்பத் திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயி கணே சனின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.