districts

img

ரூ.90 கோடி மோசடி: தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா

சேலம், நவ.14- பொதுமக்களிடம் வசூல் செய்த ரூ.90 கோடியை மோசடி செய்த தனி யார் நிறுவன நிர்வாகிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலு வலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க வந்த னர். அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆவேசமடைந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இதனைத்தொ டர்ந்து காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி புகார் அளிக்க அனு மதித்தனர். இதன்பின் அவர்கள் செய்தியா ளர்களிடம் கூறுகையில், சேலம் பிருந்தாவன் ரோடு பகுதியில் அமுத சுரபி என்னும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ கம் மற்றும் புதுச்சேரியில் 87 கிளை களை கொண்ட இந்த வங்கியில் 520 பணியாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். சிறுசேமிப்பு என்ற பெயரில் பொதுமக்களிடம் தினசரி, வாரம், மாதம் என பணம் வசூலித்துள்ளனர்.

இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வங்கியில் பணம் செலுத்தி யுள்ளனர். ஆனால், முதிர்வு காலம் முடிந்தும் வங்கியில் செலுத்தப்பட்ட பணத்திற்கு எந்ததொகையும் வழங் காமல் கடந்த ஏழு மாதமாக மேற் கண்ட நிறுவனம் காலம் தாழ்த்தி வந் தது. இதுவரை பொதுமக்களிடமி ருந்து ரூ.90 கோடி பணம் வசூலித் துள்ளனர். தற்போது தலைமை அலு வலகம் மூடியுள்ளது. இதுகுறித்து எங்களிடம் வசூல் செய்த பணியாளர்களிடம் கேட்ட போதும், பணியாளர்களுக்கு ஊதி யம் வழங்காமல் நிலுவையில் உள்ள தாக தெரிவித்தனர். இதுதொடர் பாக காவல் நிலையத்தில் புகார் அளித் தும் எந்தெந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே, மேற்கண்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆயிரம் பேர்  கட்டிய தொகையான ரூ.90 கோடியை மீட்டுத்தர வேண்டும் என வலியு றுத்தினர்.