districts

img

தருமபுரி ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்

தருமபுரி, பிப்.3- நல்லம்பள்ளி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் துணிச்சலோடு அடக்கினர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராமம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் வகித்தார். இப்போட்டியில் 603 காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் இருசக்கர வாகனம், அதிக காளைகளை அடக்கிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசினை சேலம் மாவட்டம், பாரப்பட்டி மாயா ஹோட்டல் காளை வென்றது. மேலும், ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த பல்வேறு காளைகளுக்கும் சிறப்பு பரிசுகளை திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் பி.சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.