districts

img

திருப்பூர் ரயில் நிலையத்தில் கூரையில்லா பார்க்கிங்

திருப்பூர் , பிப்.12- திருப்பூர் ரயில் நிலைய பார்க்கிங் கில் கூரை இல்லாததால், இருசக்கர  வாகனங்கள் மழை மற்றும் வெயிலில் காய்கிறது. எனவே பார்க் கிங் பகுதிக்கு கூரை அமைக்க வேண் டும் என பயணிகள் கோரிக்கை வைத் துள்ளனர்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங் களை சேர்ந்தவர்கள் வந்து செல்லக் கூடிய முக்கிய ரயில் நிலையமாக திருப்பூர் ரயில் நிலையம் உள்ளது.  மேலும், இந்த ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கோவை உட்பட பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று வருகின்றனர். இவர் கள் தங்கள் இருசக்கர வாகனங்க ளைத் திருப்பூர் ரயில் நிலையத்தில்  உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். இதற்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் நடை மேடை 1 மற்றும் நடைமேடை 2 ஆகிய  பகுதிகளில் ரயில்வே நிர்வாகம் சார் பில் பார்க்கிங் பகுதிகள் ஒப்பந்ததா ரர்களுக்கு குத்தகை விடப்பட்டுள் ளன.  சாதாரண நாட்களில் 2 பார்க்கிங்  பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்ப டுகிறது. இதுவே பொங்கல், தீபாவளி  உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலுக்கு மத்தியில் நிறுத்தப் படுகிறது. இங்கு நிறுத்தப்படும் சைக் கிள்களுக்கு ரூ.10ம், மாற்றுத்தி றனாளிகள் 3 சக்கர வாகனத்திற்கு ரூ.15ம், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் இருசக்கர வாகனத்திற்கு ரூ.20ம், 12  மணி நேரத்திற்கு மேல் கூடுதல் கட்ட ணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்நி லையில் கூரையில்லாமல் உள்ள இந்த பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதால் மழை மற்றும் வெயி லில் வாகனங்கள் துருப்பிடித்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறுகையில், பழைய வாகன பார்க்கிங் இடித்து, தற்போது புதிய  பார்க்கிங் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், ரயில் நிலை யம் முன்பு தடுப்புகள் அமைத்து பார்க்கிங்காக செயல்பட்டு வருகி றது. இந்த பார்க்கிங்கிற்கு கூரை  இல்லை. இதனால் இங்கு நிறுத்தும்  இருசக்கர வாகனங்கள் வெயில் காய் கிறது. நாள் முழுக்க வெயிலில் காய்வதால், சீட் கவர் சேதமாகிறது.  மேலும் பெட்ரோலும் ஆவியாகிறது.  எனவே புதிய பார்க்கிங் பணிகள் முடி யும் வரை தற்காலிகமாக கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.