districts

img

வத்தல்மலையில் கனமழை: சாலையில் பாறைகள் விழுந்தன!

தருமபுரி, டிச.2- தருமபுரி மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் கனமழை பெய்து  வரும் நிலையில், வத்தல்மலைக்கு  செல்லும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. ‘பெஞ்சால்’ புயல் சனியன்று இரவு கரையை கடந்தது. இதன்  காரணமாக, கடலோர மாவட்டங்க ளில் கனமழை பெய்தது. தருமபுரி  மாவட்டத்தில், சனியன்று காலை முதல் மாலை வரை சாரல் மழை  பெய்தது. தொடந்து ஞாயிறன்று பர வலாக கனமழை பெய்ய தொடங்கி யது. வத்தல்மலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக 4, 6, 9 ஆகிய கொண்டை ஊசி  வளைவுகளில் மண் சரிவு ஏற்பட் டது. மேலும், 9 ஆவது கொண்டை  ஊசி வளைவில், பாறைகள் சாலை யில் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து வத்தல்மலையில் இருந்து வந்த பொதுமக்கள் ஒண் றிணைந்து, சாலையில் இருந்த பாறைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்து தங்கு தடையின்றி செல்ல சீர் செய்தனர். வாணியாறு அணை வாணியாறு அணை நீர்ப்பிடிப்பு  பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  தற்போது அணையின் மொத்த கொள்ளளவான 65.27 அடிக்கு தண் ணீர் எட்டியுள்ளது. தொடர்ந்து ஏற் காடு மலைப்பகுதி மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிக ளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்தானது விநா டிக்கு 1300 கனஅடியாக உயர்ந்துள் ளது. அணையின் பாதுகாப்பு கருதி  விநாடிக்கு 1150 கனஅடி உபரிநீர் 3 மதகுகள் வழியாக வாணியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அமைச்சர் நேரில் ஆய்வு அரூரை அடுத்த கோட்டப் பட்டி அருகே உள்ள செலம்பை  ஆற்றில், சுற்றுவட்டாரப் பகுதிகளில்  பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் செலம்பை மற்றும் ஆவலூர் ஆகிய  இரண்டு கிராமங்களையும் இணைக்கும் தரைப்பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள்  இக்கரையில் இருந்து அக்கரைக் குச் செல்ல முடியாமல் தவிப்புக் குள்ளாகினர். “ஆண்டுக்கு குறைந் தது ஐந்து முறையாவது இந்த ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.  அப்பொழுது இந்த ஆற்றைக் கடந்து செல்வதற்கு பல்வேறு சிர மங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, உயர்மட்ட பாலம் கட்ட  வேண்டும், என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து தக வலறிந்த சுற்றுலாத்துறை அமைச் சர் ரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் மகேஸ்வரன் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் ஞாயி றன்று நேரில் சென்று பார்வையிட்ட னர். இதையடுத்து பேரிடர் மீட்பு  குழுவினர் மூலம் தவிப்புக்குள் ளான கிராம மக்கள் அக்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத் திய அமைச்சரிடம், உயர் மட்டப்  பாலம் அமைப்பதற்கான கோரிக் கைகள் குறித்து கிராம மக்கள்  விளக்கினர். இதனையறிந்த அமைச்சர், முதல்வரிடம் இது குறித்து விளக்கி, கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான வழிவகை  செய்யப்படும் என உறுதியளித் தார். மரம் விழுந்து கார் சேதம் தருமபுரி நகராட்சி அலுவலகம்  அருகே உள்ள பழமையான புளி யமரம் ஒன்று கனமழை காரண மாக ஞாயிறன்று விழுந்தது. இதில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவரின் கார் சிக்கி சேதமடைந்தது. இதனையறிந்த நக ராட்சி ஊழியர்கள் மற்றும் தீய ணைப்பு துறையினர் உடனடியாக ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மரத்தினை வெட்டி அகற்றினார்.