districts

விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை: எஸ்.பி நேரில் விசாரணை

தருமபுரி, ஜூலை 15- அரூர் அருகே விவசாயி-யின் வீட் டில் ரூ.27.50 லட்சம் பணம், 9 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந் தவர் குமரேசன் (46). கீரைப்பட்டியில் வசிக்கும் இவரது உறவினர் அன்பழகன் என்பவர், தமது மகளின் திருமண செல விற்காக அண்மையில் 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளனர். நிலம் விற் பனை செய்ததில் முதல்கட்டமாக ரூ.25 லட்சம் பணம் வந்துள்ளது. பணம் பாது காப்பிற்காக அச்சல்வாடியில் உள்ள குமரேசன் வீட்டில் வைத்துள்ளனர். இந் நிலையில், அன்பழகன் தமது மகளின் திருமணம் தொடர்பாக பேசுவதற்காக குமரேசனை கீரைப்பட்டி கிராமத்துக்கு வரச்சொல்லியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, குமரேசன், அவது மனைவி ஆகியோர் வெள்ளியன்று இரவு சுமார் 8  மணியளவில் கீரைப்பட்டி சென்று விட்டு, மீண்டும் சுமார் 9 மணிக்கு அச்சல்வாடி கிராமத்திலுள்ள தனது வீட்டிற்கு வந் துள்ளனர். அப்போது, குமரேசனின் வீட் டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த சேமிப்பு பணம் ரூ.2.50 லட்சம் உள்பட மொத்தம் ரூ.27.50 லட்சம் ரொக் கம், 9 சவரன் நகை உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திரு டிச் சென்றுள்ளனர். பணம் மற்றும் நகையை திருடிய அடையாளம் தெரி யாத நபர்கள், பீரோ மற்றும் வீட்டின் உள் பகுதியில் மிளகாய் பொடிகளை தூவி யுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீ பன் ஜேசுபாதம் நேரில் விசாரணை மேற் கொண்டார். மேலும், சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் தனிப்படை போலீசார் மற்றும் தடயவியல் துறையி னர் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.