திருப்பூர், பிப்.4- தென்னம்பாளையத்தில் சாலை யோர வியாபாரிகளால் விற்பனை பாதிக்கப்படுவதாக உழவர் சந்தை விவ சாயிகள் மறியலில் ஈடுபட்ட நிலை யில், சாலையோர வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், தென்னம் பாளையத்தில் உழவர் சந்தை செயல் பட்டு வருகிறது. அப்பகுதியில் சாலை யோர வியாபாரிகள் பலர் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய் வதால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகவும், இத னால் சந்தை பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உழவர் சந்தைக்கு 150 மீட்டர் தூரம் தள்ளி சாலையோரங்களில் பழங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக சாலையோர வியாபாரிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக விவசாயிக ளும், உழவர் சந்தைக்குச் செல்லாமல், சாலையோர வியாபாரிகளுக்கு போட் டியாக பல்லடம் சாலையிலேயே வியா பாரம் செய்து வந்தனர். இதன் காரண மாக போக்குவரத்து பாதிக்கப்பட் டதை தொடர்ந்து வெள்ளியன்று கோட் டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. எனினும் சமூ கத்தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து ஞாயிறன்று காலை சாலையோர வியாபாரிகளை நிரந்தர மாக அப்புறப்படுத்த வலியுறுத்தி விவ சாயிகள் பல்லடம் சாலையில் தென்னம் பாளையத்தில் காய்கறிகளை சாலை யில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத் தின் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து காவல் துறையினர் மற்றும் மாந கராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதைத்தொ டர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம் உழவர் சந்தையில் இருந்து 150 மீட்டர் தள்ளி விதிமுறை கள் படி செயல்படும் சாலையோர வியா பாரிகளை அப்புறப்படுத்தக்கூடாது என வும், மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டு தல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் சாலை டி.கே.டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர வியாபாரிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.