கோபி, ஜன.21- காசிபாளையம் பேரூராட்சி பகுதியில், சாலையோரம் வசிக்கும் குடும்பத்தினர், குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண் டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளை யம் பேரூராட்சி, கணபதிபாளையம் நெடுஞ்சாலையோரத் தில் மசிரியம்மாள், சரசாள், சின்னச்சாமி, செல்வன், ஆறுமு கம் ஆகியோரின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இக்குடும்பத்தினருக்கு மின்வசதியை தவிர, அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை கால்வாய், கழிப்பிட வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. இது குறித்து காசிபாளையம் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக மனு அளித்தும், நடவ டிக்கை இல்லை. தேர்தல் காலத்தில் வாக்கு கேட்க வரும் வேட்பாளர்களிடம் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டி மனு அளித்தால், வெற்றி பெற்றதும் முதல் கோரிக்கையாக நிறைவேற்றுவதாக வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசி செல்கின்றனர். தற்போது கோபி - சத்தி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் குடிநீர் தேவைக்கு காலையில் சாலையை கடந்து மையதிட்டு கற்கள் மீது குடங் களை வைத்து ஆபத்தான முறையில் தான் செல்ல வேண்டி யுள்ளது. எனவே, காசிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் சாலையோரத்தில் உள்ள குடும்பத்தினரின் நிலை அறிந்து குடி நீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.