திருப்பூர், நவ.6- காவல் ஆணையர் அலுவலகம் முன்பு உள்ள சாலையை பழையபடி இருவழி சாலையாக மாற்ற உத்தரவிட கூறி, மாநகர காவல் ஆணையர் அலு வலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் புதனன்று சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், திருப்பூர் குமார் நகர் சாலையில் தனி யார் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த இரண்டு பள் ளிகளிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிகள் முன்பு கடந்த மாதம் புதிய மாநகர காவல் ஆணையர் அலுவலகம் திறக்கப்பட் டது. இந்நிலையில், திடீரென இச்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள் ளது. மேலும் பள்ளியின் வெளியில் வாகனங்களை நிறுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவ மாணவிகளை அழைத்து செல்ல வரும் பெற்றோர்கள், நீண்ட தூரம் சுற்றி பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதே சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலை யில், அப்போது இது போன்ற பிரச்ச னைகள் இல்லை. மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த பின்னரே இது போன்ற அடாவடி போக்கில் போலீ சார் ஈடுபடுகின்றனர் என மாணவ, மாண விகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டு கின்றனர். மாநகர போலீசாரை கண்டித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.