பொள்ளாச்சி, ஆக. 5- சாலைப் பணியாளர் சங்கத்தின் பொள்ளாச்சி கோட்ட பேரவைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க 9 ஆவது பொள்ளாச்சி கோட்டக் பேரவை கூட்டமானது, பொள்ளாச்சி ஏடிஎஸ்சி தியேட்டர் சாலையில் உள்ள வங்கி ஊழியர் சங்ககட்டிடத்தில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, கோட்டத் தலைவர்எம். வெற்றி வேல் தலைமை தாங்கினார். இதில், மாநிலச் செயலாளர்து.சிங்கரா யன் துவக்கவுரையாற்றினார். கோட்டச் செயலாளர் ச.ஜெகநாதன் மற்றும் பொருளாளர் வி.சின்னமாரி முத்து அறிக்கைகளை முன்வைத்த னர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணைப் பெற்றிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலைப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மா.பாலசுப்ரமணியம், மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.