districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மின்தடை

தருமபுரி, பிப்.13- தருமபுரி மாவட்டம், கடத் தூர் கோட்டத்திற்குட்பட்ட கடத்தூர், ஆர்.கோபிநாதம் பட்டி, ராமியனஅள்ளி துணை மின்நிலையங்களில் செவ்வாயன்று (இன்று) பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ராமியன அள்ளி, சிந்தல்பாடி, பசுவா புரம், காவேரிபுரம், தென் கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்மட்டி, நவலை, ஆண் டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த் தாங்குளம், ராமாபுரம், சுங் கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்த மேடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின்சா ரம் நிறுத்தம் செய்யப்படுகி றது என தெரிவிக்கப்பட்டுள் ளது.

ரூ.50 லட்சத்தில் சாலை விரிவாக்க பணிகள்

உதகை, பிப்.13- கோத்தகிரியிலிருந்து குன்னூர் வரை ரூ.50 லட்சத்தில், சாலை விரிவாக்கம் செய் யும் பணி நடைபெற்று வருகிறது. கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார் பில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்ன தாக சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்து  தடுப்புச் சுவர் கட்டும் பணி, பிரதான சாலை களில் வேகத்தடைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 50 லட்சம் ரூபாய் செலவில் கோத்தகிரி - குன்னூர் சாலை யில் கட்டபெட்டு அருகே ஆபத்தாக விபத்து ஏற்படும் வகையிலிருந்த குறுகிய வளைவை விரிவாக்கம் செய்து, மழை நீர் வழிந்தோ டும் வகையில் பாலத்துடன் கூடிய தடுப்பு  சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொ டர்ந்து இந்தப் பணிகள் நெடுஞ்சாலை துறை  உதவி கோட்டப் பொறியாளர் சாமியப்பன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகி யோர் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரேக்ளா போட்டி

கோவை, பிப்.13- பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் -  காட்டாங்காடு பிரிவு பகுதி யில் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கலந்து கொண்டன. இதில் 2 பல்  காளைகளுக்கு 200 மீட்டர்  தூரமும், 6 பல் காளைக ளுக்கு 300 மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட் டது. ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து  இலக்கை நோக்கி சென்றதை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.  வெற்றி பெற்ற காளைக ளுக்கு பரிசளிக்கப்பட்டது.