சேலம், செப்.27- புதிய மோட்டார் வாகன சட் டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, சாலை போக்குவரத்து மற் றும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மோட்டார் வாகன சட் டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஓட்டுநர் களை கொலை குற்றவாளியாக சித் தரிக்கக்கூடாது. 15 ஆண்டு காலம் கடந்த வாகனங்களை சிதைக்கக் கூடாது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வங்கி மூலம் புதிய ஆட்டோ வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். தமிழக அரசு மீட்டர் கட்ட ணத்தை மாற்றியமைத்திட உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். காவல்துறையின் ஆன் லைன் அபராதக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவ ரத்து அலுவலர், பிரேக் இன்ஸ்பெக் டர் உள்ளிட்ட காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐ டியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் முரு கேசன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், பொருளாளர் மணிகண்டன், ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் மகாதே வன், நிர்வாகிகள் மூர்த்தி, சந்திரன், ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.