நாமக்கல், ஏப்.29- குமாரபாளையத்தில் கொளுத்தும் வெயி லால் சாலையோர வியாபாரிகள் கடும் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவு றுத்தி வருகிறது. இதனிடையே, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சேலம் சாலை, எடப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல் வேறு இடங்களில் சாலையோர வியாபாரி கள் ஏராளமானோர் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலா னோர் வயதானவர்களாக உள்ளனர். இதன் காரணமாக கோடை வெயிலை தாங்க முடியா மல் அவ்வப்போது சோர்ந்து போகுதல், மயங்கி விழுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெற்று வருகிறது. குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே புதிதாக சமீபத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு, அதில் வியாபாரிகள் கடைகளை வைத்து தொழில் செய்து வருகிறார்கள். இந்த கடையின் மேலே தகர சீட் போடப்பட்டுள்ளதால், அனல்காற் றாலும் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சாலையோர வியா பாரிகள் உடல் நலத்தை பேணிக் காக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, வயதான வர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைந்த நபர்க ளுக்கு, ஊட்டச்சத்து மருந்து உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.