ஏற்காடு செல்லும் சாலை சீரமைப்பு கனரக வாகனங்கள் செல்ல மாற்று வழி
சேலம், ஜூலை 31- குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் சீர மைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கனரக வாகனங்கள் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், குப்பனூர் - கொட்டச்சேடு - வாழவந்தி சாலை கி.மீ.5/4ல் ஏற்க னவே சேதமடைந்த சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனவே, சாலைப் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் நலன் கருதி 31.07.2023 முதல் 06.08.2023 வரை 7 நாட்க ளுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் குப்பனூர் - கொட்டச்சேடு - வாழவந்தி வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியே அனுமதிக்கப்படும். இதர கனரக வாகனங்கள் மாற்று வழியாக மேற்குறிப் பிட்ட நாட்களில் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் பிர தான சாலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு பண்டகச்சாலையில் தக்காளி இல்லை: மக்கள் ஏமாற்றம்
சேலம், ஜூலை 31- என்ஜிஓ கூட்டுறவு பண்டகச்சாலை யில் தக்காளி கிடைக்காததால் பொது மக்கள் அலுவலர்களை முற்றுகை யிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவது தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் ஒரு கிலோ தக் காளி விலை 180 ரூபாய் 200 ரூபாய் வரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், சேலம் மாவட்டத்தில் கூட்டு றவு பண்டகச் சாலையில் மலிவு விலை தக்காளி விற்பனை 20 கடைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப் பட்டது. ஒவ்வொரு கடைக்கும் 100 கிலோ தக்காளி விகிதம் விற்கப்பட்டு வந்தது ஒரு கிலோ தக்காளி ரூ.60 ரூபாய்க்கு மலிவு விலையில் விற்பனை செய்யப் பட்டு வந்தது. இந்நிலையில் சேலம் ஆட் சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்ப ராயன் தெருவில் அமைந்துள்ள என் ஜி ஓ கூட்டுறவு விற்பனையகத்தில் கடந்த மூன்று தினங்களாக தக்காளி விற்பனை நடைபெறவில்லை. திங்களன்று பல் வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வாங்க வந்த 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனைதொடர்ந்து அலுவலகத் திற்குள் சென்று தக்காளி வராதது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக் கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு தடை இன்றி தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைய டுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.
சோலையாறு அணையில் மின் உற்பத்தி
கோவை, ஜூலை 31- தொடர் மழையின் காரணமாக நீர்மட்டம் 132 அடியை தாண்டியதால், சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து விட்டது. எனினும் ஆங்காங்கே பெய்து வரும் லேசான மழை காரணமாக ஆறு களில் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், சோலையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. இதுதவிர மேல்நீராறு அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து, 860 கன அடி தண்ணீரும், கீழ் நீராறு அணையில் இருந்து 116 கன அடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு சென்று வருகிறது. இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலை யாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 132 அடியை தாண்டியது. சோலையாறு அணைக்கு விநாடிக்கு 1,560 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து சோலையாறு மின் நிலையம் - 2 இயக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. மின் உற்பத்திக்கு பிறகு 434 கன அடி தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியை பொறுத்தவரை கனமழை பெய்ய வேண்டிய நிலையில், மழை பெய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை இருப்தால், பரம்பிக்குளம் அணைக்கு போதிய தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.
நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, ஜூலை 31- ஈரோடு மாவட்டம், சித்தா ரில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங் கத்தின் தலைவராக எஸ்.சின்னச்சாமி, செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப் பட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், மாவட்ட தலை வர் எஸ்.தனபால், சிஐடியு உதவித்தலைவர் ஜெகநாதன் கலந்து கொண்டனர்.
வரி விதிப்பு செய்யாத சொத்துக்களுக்கு காலக்கெடு: மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை
திருப்பூர், ஜூலை 31 - திருப்பூர் மாநகரில் வரி விதிப்பு செய்யா மல் இருக்கும் சொத்துக்களுக்கு ஆகஸ்ட் முதல் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் சட்டப்படி கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ந. தினேஷ்குமார் கூறினார். இது குறித்து மாமன்றத்தில் மேயர் தினேஷ்குமார் திங்களன்று கூறியதாவது: மாநகராட்சியில் இரண்டு வார்டுகளில் ஆய்வு செய்து பார்த்தபோது வரி விதிப்பில் 309 சதவீதம் வித்தியாசம் உள்ளது. இதுபோல் மாநகராட்சி முழுவதும் ஏராளமான கட்டிடங் கள் குறிப்பாக வணிக கட்டிடங்கள் வரி விதிப்பு செய்யப்படாமல், கட்டிடங்களுக்கு உரிய வரி செலுத்தாமல் குறைவான வரி செலுத்தியும் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியை கெடுவாக கொண்டு வரி விதிப்பு செய்யாத கட்டிடங்களுக்கு அதன் உரிமையாளர்கள் மண்டல அலுவலகங் களை அணுகி வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் செப்டம்பர் மாதத்தில் வரி விதிப்பு செய்யாத கட்டிடங் களுக்கு சட்டப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும். வருவாய் ஆய்வாளர்கள் வரி வசூலிப்பாளர்கள் இதில் முழுமையாக கவ னம் செலுத்த வேண்டும். சொத்து வரி செலுத்துவதை கண் காணிக்க மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் குழு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்தாதவர்கள் தானாக முன்வந்து வரி செலுத்த வேண்டும். புதிய வரி விதிப்பை 30 நாட்களுக்குள் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் பிரச்சனை என் றால் மக்கள் மண்டல அலுவலகங்களையும், மைய அலுவலகத்தையும் அணுகலாம். இவ் வாறு மேயர் தினேஷ்குமார் கூறினார்.
16 லட்சம் கொள்ளை 6 பேர் கைது
திருப்பூர், ஜூலை 31 – திருப்பூர் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலை யம் பின்புறம் காமாட்சியம் மன் வீதியில் கடை ஒன்றில் ரூ.16 லட்சம் கொள்ளைய டித்துச் சென்ற வழக்கில் குற் றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் துப்புத் துலக்கி, கோவை பெண் காவலரின் கணவர் சக்திவேல் அவரது நண்பர்களான அழகர், வாசு, ஜெயபாண்டி, தவம், சிவ மணி ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.
முகப்பட்ட அகவிலைப்படி வழங்குக பிஎஸ்என்எல் ஓய்வுபெற்றோர் தர்ணா
தருமபுரி, ஜூலை 31- கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வுபெற்றோர் அமைப்பி னர் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவில், 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 15 சதவீதம் பிட்மென்டுடன் பென்சன் மாற்றம் ஒன்றிய அரசு ஏற்ப டுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஊதிய மாற் றத்தையும் பென்சன் மாற்றத்தைத்தையும் இணைக்கூடாது. டிஓடி அலுவலகத்தில் ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்ட கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கோபாலன் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செய லாளர் டி.பாஸ்கரன், மாநில சிறப்பு தலைவர் எம்.நாராயண சாமி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்க மாநில தலைவர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிஎஸ்என்எல் எம்ளாய்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். இதில், திரளானோர் பங் கேற்றனர்.
மேம்பால பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள் திருட்டு: 3 பேர் கைது
கோவை, ஜூலை 31- கோவை – அவிநாசி சாலையில், மேம்பால பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை - அவிநாசி சாலையில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சனியன்று லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் கட்டு மானத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திருடி சென்றனர். இரும்பு கம்பிகள் திருடு போனதை அறிந்த தனியார் கட்டுமான நிறு வனத்தினர் கோவை, பந்தையசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இரும்பு கம்பி களை திருடி சென்றது காந்திபுரம் இளங்கோ நகரைச் சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் ராஜ் (19) மற்றும் 17 வயது சிறு வன் என்பது தெரியவந்தது, இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
தருமபுரி, ஜூலை 31- பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குத்தல அள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருடைய 60 அடி ஆழ கிணற்றில், சனியன்று இரவு 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. அப்போது கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் மான் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதையடுத்து ஞாயிறன்று காலை மானின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத் துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தவித்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் புள்ளி மானை பிக்கிலி வனப்பகுதியில் உள்ள பனைக்குளம் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
சாலையோர புதர்கள் அகற்றம்
உதகை, ஜூலை 31- பந்தலூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழந்த நிலை யில், சாலையோரம் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு வருகின் றன. நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, கோரஞ்சால் சப்பந் தோடு பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா. இவரது மகள் அஸ்வதி. கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று 2 பேரும் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்த சென்றபோது, மூங்கில் காட்டுக்குள் இருந்த வந்த காட்டு யானை 2 பேரையும் தாக்கியது. இதில் தாயும், மகளும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பலனின்றி சுனிதா இறந்து விட்டார். இதற்கிடையே வனத்துறையை கண் டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கோரஞ்சால் - சப்பந்தோடு சாலையில் உள்ள மூங்கில்கள், புதர்களை அகற்ற வேண்டும். யானை தாக்கிய உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கோரஞ் சால் - சப்பந்தோடு சாலையோரம் உள்ள மூங்கில்கள், முட்பு தர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.
குன்னூர்: 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
உதகை, ஜூலை 31- குன்னூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுசூழலை பாது காக்க பிளாஸ்டிக் பொருட்கனை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வரும் போது, சோதனைச்சாவடியில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் நக ரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட் கள் ஒழிப்பு சோதனை நடைபெற்றது. குன் னூர் கோட்டாட்சியர் பூஷண குமார் தலைமை யில், வட்டாட்சியர் கனி சுந்தரம், துணை வட் டாட்சியர் முனீஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண் டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில் கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ப னைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து 4 கிலோ பிளாஸ்டிக் பறி முதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ.25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
முள்ளங்கி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
தருமபுரி, ஜூலை 31- தருமபுரி உழவர் சந்தையில் முள் ளங்கி விலை தொடர் வீழ்ச்சியை சந்தித் துள்ளது. தருமபுரி மாவட்டம், திப்பம்பட்டி, கம்பைநல்லூர், காரிமங்கலம், அதக பாடி, தொப்பூர், பி.அக்ரஹாரம், பென் னாகரம், மாரண்டஅள்ளி, வெள்ளிச் சந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்க ளில் ஏராளமான விவசாயிகள் முள் ளங்கி சாகுபடி செய்துள்ளனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகு படி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளங்கி விலை ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனையா னது. தருமபுரி உழவர் சந்தை உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முள்ளங்கி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. இந்நிலையில், தருமபுரி உழவர் சந்தைக்கு தொடர்ந்து முள் ளங்கி வரத்து அதிகரித்ததால் விலை யும் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக முள்ளங்கி விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகள் மற்றும் மார்க் கெட்டுகளிலும் முள்ளங்கி விலை சரிந் துள்ளது. அறுவடை கூலி, போக்குவ ரத்துக்கு கூட கட்டுப்படியாக முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
மஞ்சள் ஏலம்
நாமக்கல், ஜூலை 31- நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண் டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 724 முதல் ரூ.14 ஆயிரத்து 759 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 686 முதல் ரூ.13 ஆயிரத்து 269 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1,500 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.