districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மேம்பால பணிக்காக அடைக்கப்பட்ட பாதை

நாமக்கல், டிச. 10- குமாரபாளையத்தில் மேம்பால பணிக்காக புறவழிச் சாலை கத்தேரி பிரிவு அடைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம்-  கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால  பணிகள் ஒரு மாதம் முன்பு துவங்கியது. சர்வீஸ் சாலை யில் வாகனங்களை திருப்பி விட வேண்டி, பாதைகளை அக லப்படுத்தி, வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் முன்பு அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலை  வழியாக திருப்பி விடப்பட்டன. தற்போது, அடிக்கல்  நாட்டப்பட்டு போடப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. இதற்காக கத்தேரி பிரிவு சாலை பகுதியில்,  பொதுமக்கள் சாலையை கடக்கும் பாதை டிவைடர்க ளால் அடைக்கப்பட்டன. தட்டான்குட்டை கிராமம், வேமன் காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பல கிரா மங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சர்வீஸ் சாலை  வழியாக பல கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள் ளது. குறுகிய காலத்திற்குள் பணிகள் நிறைவு செய்து,  இந்த சாலையயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை மின்தடை

ஈரோடு, டிச. 10- ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் துணை மின்நிலை யத்தில் செவ்வாய்கிழமை (நாளை) மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், பெரியவீ ரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோலபாளையம், வடம லைகவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம், கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப் பட்டுள்ளது.

சாலை ஆக்கிரமிப்பு  விளம்பர பலகை வைத்து கவன ஈர்ப்பு

தருமபுரி, டிச.10- தருமபுரி அருகே  ஆக்கிரமிப்பு செய்த சாலையை மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் சார்பில் விளம்பர பலகை வைக் கப்பட்டுள்ளது தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப் பில் 14 ஆவது வார்டில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளது. சாலைகளை மீட்டுத்தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கடந்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுகுறித்து, இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், வெண் ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய பகுதி தருமபுரி நகரை ஒட்டி யுள்ள முக்கிய பகுதியாகும். காவலர் ஆயுதப்படை மைதா னம், போலீசார் குடியிருப்பு உள்ளிட்டவை இதன் அருகில் உள்ளன. அரசு துறையின் அனைத்து துறைகளிலும் உள்ள  அதிகாரிகள், ஊழியர்கள் இப்பகுதியில் அதிகமாக குடி யிருந்து வருகின்றனர். இந்நிலையில், வெண்ணாம்பட்டி,  ஆயுதப் படை போலீசார் குடியிருப்பு முதல் ஹவுசிங்  போர்டு வரை 60 அடி அகலம் கொண்ட சாலையை ஆக்கி ரமிப்பு செய்து, தற்போது 30 அடி சாலையாக மாறி உள்ளது.  அதிலும் கடைகள் முன்புறமாக சாலையிலேயே வாகனங் களை நிறுத்தி விடுவதால் இப்பகுதியில் போக்குவ ரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தற்போது வரை எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இப்பிரச்சனை குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி விளம்பர பலகை வைத்துள்ளனர்.

நிரம்பிய குளம்: பொங்கல் வைத்து மகிழ்ச்சி

கோவை, டிச.10- கோவை மாவட்டம், அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கஞ்சப்பள்ளி ஊராட்சியில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவுள்ள எருக்கன்குளம் உள்ளது. கொட்டி தீர்த்த கனமழையால் இந்த குளம் 47 ஆண்டுகளுக்கு பிறகு முழு வதுமாக நிரம்பியது. அதனால் நீலக வுண்டன்புதூரில் உள்ள குளத்தின் தடுப்ப ணையில் மழைநீரானது வழிந்தோடியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இணைந்து கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து தடுப்பணைக்கு பூஜை கள் செய்து வழிந்தோடிய மழைநீரில் வெற்றிலை, பாக்கு, பூ வைத்தும், குளத்தில்  உள்ள மழைநீரில் மஞ்சள் பொடி தூவியும்  வழிபட்டனர். மழைநீரானது தடையில்லா மல் செல்வதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில், அந்த நீர்வழிப்பாதைகளில் உள்ள  செடிகளை அகற்றினர். இந்த நீரானது செங்கப்பள்ளி வழியாக அவிநாசி வட்டம், ராமநாதபுரம் வழியாக அவிநாசி தாமரை குளத்திற்கு செல்லும். இதேபோல் ஓட்டர் பாளையம் ஊராட்சியில் 65 ஏக்கர் பரப்ப ளவுள்ள பூலுவபாளையம் குளம் 90 சதவி கிதம் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மின் விபத்தில் சிறுமி உயிரிழப்பு

ஈரோடு, டிச. 10- ஈரோட்டில் மின் விபத்து ஏற்பட்டு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாநகர், அணைக்கட்டு, எம்ஜி ஆர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஓவியா, ஹரினி ஆகிய மகள்கள் இருந் தனர். சனியன்று காலை வீட்டிலிருந்த ஓவியா (13) மின்விசிறியை இயக்க முயற் சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீ ரென மின்விபத்து ஏற்பட்டு, ஓவியா மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு, உள்ளே வந்து பார்த்த  செந்தில்குமார், மயங்கிக் கிடந்த ஓவி யாவை ஆட்டோ மூலம் அரசு தலைமை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த மின் விபத்து  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி டிச.10- தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு  தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏலகிரி அரசு பள்ளி  மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவ லர் பாராட்டு தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன் றியத்திற்கு உட்பட்டது ஏலகிரி பகுதி. இந்த  பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ஏலகிரி சுற்று வட்டார பகுதி மற்றும் சாமிசெட்டிப்பட்டி,  தண்டுகாரம்பட்டி, கொட்டுப்பட்டி போன்ற  பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த  மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மற்றும் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு  அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஏலகிரி அரசு மேல் நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு படிக் கும் மாணவர்களும் பங்கேற்று தேர்வை எழுதினர். இதில் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வில் முகேஷ் 89 மதிப் பெண், கவிப்பிரியா 83 மதிப்பெண், கௌதம்  82 மதிப்பெண்,மோனிகா 81, லோகேஸ்வரி 80 மதிப்பெண் எடுத்து ஆகியோர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1500 தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழ் நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் புனிதா, முகேஷ் ஆகிய இருவரும் தேர்ச்சி  பெற்றுள்ளனர். இவர்களுக்கு இளநிலை  பட்டப்படிப்பு வரை ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10000 வீதம் கல்வி உதவித்தொகை யாக தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.  இதனால் தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களை தருமபுரி முதன்மை கல்வி அலு வலர் ஜோதி சந்திரா நேரில் பள்ளிக்கு வந்து  வாழ்த்து தெரிவித்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் இரு பால் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

நாமக்கல், டிச.10- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபா ளையம் அருகே உள்ள கொன்னையார் கிராமத்தில், சக்க ராம்பாளையம் அருந்ததிய மக்களுக்கு சொந்தமான மயானம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. அதன்  அருகில் உள்ள நிலத்தை, சண்முகம் என்பவர் கடந்த ஆறு  மாதத்திற்கு முன்பு விலைக்கு வாங்கி அதனை அரசு நில அளவிற்கு படிக்கட்டி அளக்காமல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அருந்ததிய மக்களுக்கு சொந்த மான மயானத்தையும் ஆக்கிரமிப்பு செய்து, அதிலிருந்த பனைமரம், வேப்பமரம் உள்ளிட்டவைகளை வேரோடு பிடுங்கி விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொ டர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மற்றும்  வட்டாட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் சனியன்று குறுவட்ட நில அளவையர் கமல்ராஜ்  தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், வரு வாய் ஆய்வாளர் அனுராதா உள்ளிட்டோர் நேரில் சென்று, அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பதை அளவீடு  மூலம் உறுதி செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அப்போது, இப்பிரச்சனை குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், எலச்சி பாளையம் ஒன்றிய கவுன்சிலருமான சுரேஷ் மற்றும் அரசு  அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித் தனர்.

“சட்டமன்ற நாயகர் – கலைஞர்” கோவையில் டிச.13ல் கருத்தரங்கம்

கோவை, டிச.10- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி, கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் டிச.13 ஆம்  தேதியன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பல் வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சி களை நடத்திட தமிழக அரசு சார்பில் 12 குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான ‘சட்டமன்ற நாய கர் - கலைஞர்’ என்ற குழு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு  சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள், கல் லூரிகளில் ‘சட்டப்பேரவை மூலமாக சமூக முன்னேற்றத் துக்கு கருணாநிதி ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த் தது’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கோவையில் இந்த கருத்தரங்கம், அவிநாசி சாலை, நவஇந் தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் டிச.13 ஆம் தேதியன்று நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள் ளது. இதில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை யில் அமைச்சர் சு.முத்துசாமி, மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சட்டப் பேரவை முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன், சட்டப் பேரவை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பேசுகின்ற னர். இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு பேரணி'

நாமக்கல், டிச.10- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நாமக்கல்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து துவங்கியது.  இதனை மாவட்ட ஆட்சியர் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் அங்கன்வாடி பணி யாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சமூக நலத்துறை உள் ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றோர், பணிபுரி யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்த லுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தியவாறு சென்றனர்.

மேகமூட்டத்தால் பேருந்து மீது லாரி மோதி விபத்து

உதகை, டிச.10- உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் நிலவிய மேகமூட்டம் காரணமாக அரசு  பேருந்து மீது மினி லாரி மோதி விபத்துக் குள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயி றன்று காலை உதகையிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள வேல்வியூ பகுதியில் சாரல் மழையுடன் கூடிய அடர்ந்த மேகமூட் டம் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது வேல் வியூ பகுதியில் உதகையிலிருந்து பயணிக ளுடன் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது, எதிர் நோக்கி வந்த மினி லாரி  மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது, அரசு பேருந்தின் மீது மோதி விபத் துக்குள்ளானது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கேத்தி காவல் துறையினர் விபத்தில் காயமடைந்த பேருந்து நடத்துநர் உட்பட இரு பயணிகளை மீட்டு சிகிச்சைக் காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உதகை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதைத்தொடர்ந்து பேருந்தில் பயணித்த  மற்ற பயணிகளை மாற்று பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல், டிச.10- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள் ளன. இங்கிருந்து மாநிலத் தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக  தினசரி லாரி கள் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நி லையில், சனியன்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட் டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பண்ணையாளர் கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.