அவிநாசி, மார்ச்.7- அவிநாசி அருகே சாக்கடை கால் வாய் அமைப்பதற்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சேவூர் பவர் ஹவுஸ் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதி யில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை கால்வாய் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால் வாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான பகுதியை ஆய்வு மேற்கொண்ட போது, பலர் ஆக்கிர மிப்பு செய்திருந்தது தெரியவந்துள் ளது. இதனை தொடர்ந்து ஊராட்சி நிர் வாகம் ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப் புகளை அகற்ற வலியுறுத்தியது. அப்ப குதியை சேர்ந்த பலரும் ஆக்கிரமிப்பு களை அகற்றி விட்டனர். இருப்பினும் ஒரு நபர் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற் றாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், சாக்கடை கால்வாய் அமைக் கும் பணி நடைபெறாமல் இருந்துள் ளது. இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள் வியாழக்கிழமை சேவூர் பவர் ஹவுஸ் சாலையை மறித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த சேவூர் காவல்துறையினர் பாப்பான்கு ளம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட் டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்களிடம் ஓரிரு தினங்க ளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு களைந்து சென்றனர்.