districts

img

கால்நடைகளைப் பறிகொடுத்த விவசாயிகள் சாலை மறியல்

திருப்பூர், பிப். 13 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம்  பாறை வலசு என்ற இடத்தில் தெரு நாய்கள்  கடித்து உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட ஆடு களை கொண்டு வந்து போட்டு, விவசாயிகள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும்   ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு பெற்றுத் தர மாநில அரசிடம் முறையிட்டி ருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்காத  நிலையல் இனிமேல் நாய்களால் கால்நடை களை இழக்கும் நிலை ஏற்பட்டால் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவ சாயிகள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னிமலை அருகே ராமலிங்கபுரம் என்ற இடத்தில் நல்லசிவம் என்ற விவசாயியின் தோட்டத்தில் இருந்த பட் டியில் வியாழனன்று தெருநாய்கள் புகுந்து  ஆடுகளைக் கடித்துக் குதறின. இங்கிருந்த மொத்தம் 30 ஆடுகளில் 25 ஆடுகள் உயிரிழந் தன. இந்த தகவல் விவசாயிகள் மத்தியில்  வேகமாகப் பரவிய நிலையில் பாதிக்கப்பட்ட  விவசாயி உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து காங்கேயம் - சென்னிமலை சாலை யில் நொய்யல் ஆற்றுக்குத் தென்புறம் திட் டுப்பாறை அருகே பாறை வலசு என்ற இடத் தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகளைச் சாலையில் கிடத்திப் போராட்டம் நடத்தினர்.  இங்கு விவசாயிகள் சாலை மறியல் செய்து வந்த நிலையில், சிவன்மலை பகுதி யில் வேறொரு விவசாயியின்  தோட்டத்தில் தெரு நாய்கள் கடித்து வெள்ளாடுகள் உயிரி ழந்தன. அங்கிருந்தும் விவசாயி செத்த ஆடு களைக் கொண்டு வந்து பாறை வலசில் போட்டு மறியலில் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து காங்கேயம் வட்டாட்சி யர், காவல் துறையினர் அங்கு வந்து விவசா யிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காங் கேயம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத் திய நிலையில் விவசாயிகள் போராட் டத்தை கைவிட மறுத்த நிலையல் அவர் அங்கி ருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். சாலை யில் கிடத்தப்பட்டிருந்த செத்த ஆடுகளை அப் புறப்படுத்த காவல் துறையினர் முயன்றனர். எனினும் விவசாயிகள் ஆடுகளை எடுக்க ஆட் சேபம் தெரிவித்தனர். இதையடுத்து காவலர் கள் விட்டுவிட்டனர். மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கூறும்போது, ஆடுகளுக்கு இழப்பீடு வழங் கும் அரசு உத்தரவு கொடுத்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம். இல்லா விட்டால் இதே இடத்தில் எத்தனை நாட்களா னாலும் எங்கள் போராட்டம்  தொடரும் என்று  கூறினர். அத்துடன் அங்கேயே மதியம் உணவு சமைத்து சாப்பிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.