districts

img

முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்றத் தலைவர் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

சேலம், மார்ச் 15- ஓமலூர் அருகே முறையாக குடி நீர் வழங்காத ஊராட்சி மன்றத் தலை வரை கண்டித்து, அப்பகுதி பொதுமக் கள் காலிக்குடங்களுடன் அரசு பேருந்து களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள  கொங்குப்பட்டி ஊராட்சி, கற்குன்றுக ளால் சூழப்பட்ட பகுதி என்பதால் வறட்சி காலங்களில் இங்குள்ள கிணறுகள் மற் றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர்  மட்டம் குறைந்து விடுகிறது. இதனால்  அங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந் நிலையில், இந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வழங்க வேண் டுமென பலமுறை ஊராட்சி நிர்வாகத் திற்கு அப்பகுதி கோரிக்கை வைத்த னர். ஆனால், ஊராட்சி மன்றத் தலை வரும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வெள்ளியன்று காலிக்குடங்களுடன் இரண்டு அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த குடிநீர் வடிகால் வாரிய பொறி யாளர், காடையாம்பட்டி ஊராட்சி ஒன் றிய அலுவலர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தனர். அதனையேற்றுக்கொண்ட பொது மக்கள் பேருந்துகளை விடுவித்து, அங் கிருந்து கலைந்து சென்றனர்.