districts

img

சாயக்கழிவுகள் குடிநீரில் கலக்கும் அபாயம்

நாமக்கல், ஜன.16- சாயக்கழிவுகள் குடிநீரில் கலக் கும் அபாயம் உள்ளதால், ஆவத்தி பாளையம் காவிரி ஆறு குடிநீரை  பயன்படுத்த மக்கள் அச்சமடைந் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் அருகே உள்ள ஆவத்திபா ளையம் பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் செயல்பட்டு வருகின் றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து சமீப காலமாக, சாயப் பட்டறை கழிவுநீர்கள் வெளியேறு வது அதிகரித்துள்ளது. இவ்வாறு வெளியேறும் சாயக்கழிவுகள் ஆவத் திபாளையம் காவிரி ஆறில் கலக் கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் செல் வது போல, கழிவு நீர் பல வண்ணங் களில் ஆவத்திபாளையம் கால்வாய்  வழியாக ஆற்றில் கலக்குகிறது. பெரும்பாலும் இரவு நேரத்தில் சாயக் கழிவு நீர் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்ப குதியை சேர்ந்த பொதுமக்கள் பல முறை மாசு கட்டுப்பாட்டு வாரியத் திற்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் கிராமசபைக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனாலும் போதிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே உள்ளது. ஒவ்வொரு முறையும் இதுகு றித்து புகார் எழும் போதெல்லாம் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்கிறார்களே தவிர, எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.  குறிப்பாக, சாயக்கழிவு கலந்த சாக்கடை வாய்க்கால்களின் அரு கிலேயே திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதி மக்களின் தேவைக் காக வழங்கப்படும் குடிநீர் சுத்திக ரிப்பு நிலையமும் அமைக்கபட்டுள் ளதால், எப்போது வேண்டுமானா லும் சாயக் கழிவுகள் குடிநீரில் கலக் கும் அபாயம் உள்ளது. இதனால், ஆற்றுக் குடிநீரை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின் றனர். எனவே, பொதுமக்களின் நலன்  கருதி, இச்சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மும், தமிழக அரசும், மாவட்ட நிர் வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.