திருப்பூர், நவ. 1 - திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பி.என் சாலை யில் மாநகராட்சி பணியில் உள்ள வாகனம் கனரக குழாய்க ளை வெளியே நீட்ட விட்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் சென்றது. அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக எடையை சுமந்து செல்லும் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுக ளுக்கு சிவப்பு துணிகளை கட்டாமல் கம்பிகளை வெளியே நீட்ட விட்டு செல்லும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது அவ்வப்போது நடக்கும். இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் திருப்பூர் மாநக ராட்சி பணிக்கான வாகனம் குழாய்கள் வெளியே நீட்ட விட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பத்த்தும் வகையில் சென்றது.