districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர  ரிக் வண்டி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சேலம், மார்ச் 1- டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண் டும், என வலியுறுத்தி ரிக் வண்டி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ரிக் வண்டி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறுகையில், சேலம் மாவட்ட ரிக் வண்டி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் தொழி லாளர்கள் 4 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு மற்றும் உதிரி  பாகங்கள் விலை ஏற்றத்தின் விளைவாக, போர்வேல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். மேலும்,  டீசல் விலைக்கு இணையாக ஒரு அடி ட்ரில்லிங் செய்ய ரூ.10 அதிகரித்து ரூ.95 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு மேலும் 10 ரூபாய் உயர்த்தப் பட உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வர போராடி வருகிறோம். கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ.88க்கு விற்கப்படுகி றது. ஆனால், தமிழ்நாட்டில் ரூ.93க்கு விற்பனை செய்யப் படுகிறது. போர்வெல் துறையில் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தால் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. அடுத்த 15 நாட்களுக்கு பிறகு ட்ரில்லிங் ஒரு அடிக்கு 105 ரூபாயாக விலை உயர்த்தப்படும், என்றனர்.

முட்டை: மைனஸ் இல்லாமல் ஒரே விலையாக நிர்ணயிக்க தீர்மானம்

நாமக்கல், மார்ச் 1- முட்டையின் பண்ணைக் கொள் முதல் விலை நிர்ணயம் செய்வதி லுள்ள பிரச்னைகளுக்கு தீர்வுகாண, மைனஸ் இல்லாமல் ஒரே விலையாக நிர்ணயிக்க, கோழிப் பண்ணையா ளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற் றியுள்ளனர். தேசிய முட்டை ஒருங்கிணைப் புக்குழுவின் சார்பில், கோழிமுட்டை களின் பண்ணைக் கொள்முதல் விலை யைக் கண்காணிக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் லில் உள்ள தேசிய முட்டை ஒருங் கிணைப்புக்குழுவின் மண்டல அலு வலகத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. தேசிய முட்டை ஒருங்கி ணைப்பு குழுவின் நாமக்கல் மண்ட லத் தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவ ருமான கே.சிங்கராஜ் தலைமை வகித் தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர் நாடகா, ஆந்திரா தெலுங்கானா மாநி லங்களில் இருந்து 9 மண்டலங்களின்  கோழிப் பண்ணையாளர்கள், நிர்வா கிகள் கலந்துகொண்டனர். இதன் பின் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் செய்தியாளர்களி டம் பேசுகையில், முட்டையின் பண் ணைக் கொள்முதல் விலையை,  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தமது 25 மண்டல அலுவலகங் கள் மூலம் நிர்ணயம் செய்து வரு கிறது. இருந்தபோதிலும், விலை நிர் ணயம் செய்த பிறகு கோழிப் பண் ணையாளர்களிடமிருந்து, நிர்ணயம் செய்த விலையை விட குறைவாக, வியாபாரிகள் கொள்முதல் செய்கின் றனர். நாமக்கல் மண்டலத்தில் தற் போதுள்ள முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 40 காசுகள் குறைக்கப்பட்டு, 4 ரூபாய் 20 காசு களாக நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. முட்டை பண்ணைக் கொள் முதல் விலையில் மைனஸ் என்ற நடைமுறையை வியாபாரிகள் பின் பற்றும்போது நாள் ஒன்றுக்கு சுமார் 3.50 கோடி ரூபாய் நாமக்கல் மண் டல கோழிப் பண்ணையாளர்க ளுக்கு வருவாய் இழப்பு ஏற்படு கிறது. எனவே, நியாயமான விலை  கிடைக்க வேண்டும் என்பதற்காகவே  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தென்னிந்தியா முழுவதும் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது. பிற மாநிலங்களில் மார்ச் 6 ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். முட்டைகள் கொண்டு செல் லப்படும் தூரம், கட்டு செலவு ஆகிய வற்றை கணக்கிட்டு அந்தந்த மாநி லங்களில் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு விலையை நிர்ணயம் செய்துவிடும், என்றனர்.

செண்டு மல்லி வளர்ப்பில்  ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம், மார்ச் 1- மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் செண்டு மல்லி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான வெள்ளியங்காடு, தாயனூர், தேரம்பாளையம், சம்பரவள்ளி, தோலம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் செண்டுமல்லி பூ விவசாயம் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. சம்பங்கி, மல்லிகை, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் சாகுபடி நடைபெற்றாலும் தேவை அதிக ரிப்பாலும் உரிய விலை கிடைப்பதாலும் செண்டு மல்லி வளர்ப்பில் மலர் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின் றனர். இங்கு விளையும் செண்டுமல்லி பூக்கள் கோவை உள்ளிட்ட மலர் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. முகூர்த்தம் மற்றும் விசேஷ காலங்களில் ஒரு கிலோ  செண்டுமல்லி ரூபாய் 50 முதல் 60 வரையிலும் பிற நாட்களில் ரூபாய் 30 முதல் 40 வரையிலும் செண்டுமல்லி விற்பனையாகி வருகிறது. செண்டுமல்லி பூ சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை இருக்காது பயிரிட்ட மூன்று மாதங்களில் பூக்க துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வனத்துக்குள் திருப்பூர் 10ஆம் ஆண்டு விழா

திருப்பூர், மார்ச் 1 - வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா சனியன்று நடைபெற்றது. பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின்  10ஆம் ஆண்டு நிறைவு விழாவும், 11ஆம் ஆண்டு தொடக்க  விழாவும் நடைபெற்றது. முதலில் இன்றைய காலகட்டத்தில் இயற்கை வளங்க ளைப் பாதுகாக்க வேண்டியது பொது மக்களா? இல்லை,  பொறுப்பில் இருப்பவர்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றப்  பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற  பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க பொது மக்களுக்கு கடமை இருந்தாலும், பொறுப்பில் இருப்பவர்களுக்கே முக்கியப் பொறுப்பு இருக்கிறது என்று நடுவர் ராஜா தீர்ப்புக் கூறினார். இதைத் தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  தன்னார்வ அமைப்பின் சார்பில் அண்ணாமலை குப்புசாமி  உரையாற்றினார்.இதில் கொடையாளர்கள், தன்னார்வ லர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்குச் சான்றுகள் வழங் கப்பட்டது. வெற்றி அறக்கட்டளை, வனத்துக்குள் திருப்பூர்  அமைப்பினர் திரளானோர் கலந்து கொண்டனர். அரசியல் மேடையாக மாற்றிய அண்ணாமலை வனத்துக்குள் திருப்பூர் நிகழ்வில் தன்னார்வ அமைப்பின்  பொறுப்பாளர் என்ற பெயரில் பங்கேற்ற அண்ணாமலை, நிகழ்வு முடிந்தவுடன் அதே மேடையில் வனத்துக்குள் திருப் பூர் பெயர் தாங்கிய பின்புலத்திலேயே அமர்ந்து பாஜக தலை வராக பேட்டியளித்தார். இதில் பாஜகவின் மாநிலச் செயலாளர்  முருகானந்தம், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மகளிர் அணி  மலர்க்கொடி  உள்ளிட்ட  பாஜகவினர் உடன் அமர்ந்திருந்த னர். பொது அமைப்பின் நிகழ்வில் பங்கேற்கும் அரசியல்  தலைவர்கள் வழக்கமாக, அங்கு அரசியல் பேசுவதை தவிர்ப் பார்கள். பத்திரிகையாளர் பேட்டி கேட்டாலும், அந்த இடத்தை  விட்டு வெளியேறி குறைந்தபட்சம் வாசலுக்கு வந்தாவது தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள். ஆனால் அந்த அடிப் படை நாகரிகம் கூட இல்லாமல், அண்ணாமலை அதே மேடை யில் பேட்டியளித்தார். இது குறித்து, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு நிர்வாகி  ஒருவரிடம் கேட்டபோது, நாங்கள் அவர்களிடம் வேறு இடத் தில் பேட்டியை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டோம்.  ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் இதே மேடை யில் நடத்தினர் என்று கூறினார். ஏற்கெனவே கனிமொழி கரு ணாநிதி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் ஆளுமை களை வனத்துக்குள் திருப்பூர் நிகழ்ச்சிக்கு அழைத்திருக் கின்றனர். அவர்கள் அந்த இடத்தில் அரசியல் பேசாமல் நாகரி கமாக புறப்பட்டுச் சென்றனர். ஆனால் பாஜகவினர் அந்த அடிப்படை நாகரிகத்தைப் பொருட்படுத்தவில்லை என்று வனத்துக்குள் திருப்பூரைச் சேர்ந்த சிலர் ஆதங்கத்துடன் கூறி னர்.

மார்ச் மாத நூல் விலையில் மாற்றம் இல்லை

மார்ச் மாத நூல் விலையில் மாற்றம் இல்லை திருப்பூர், மார்ச் 1 - திருப்பூரில் மார்ச் மாதத்திற்கான பின்னலாடை தயாரிப்பு  பருத்தி நூல் விலை அறிவிக்கப்பட்டது. கடந்த மாத விலை யில் மாற்றமில்லை என நூற்பாலைகள் சனியன்று அறிவித் துள்ளன. திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங் கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக  முக்கிய மூலப்பொருளாக பருத்தி நூல் இருந்து வருகிறது.  தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன்,  அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து  ஆடைகளை தயாரித்து வழங்குவது வழக்கம். நூல் விலை  மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு  ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மார்ச்  மாதத்துக்கான நூல் விலையில் மாற்றமில்லை என  நூற்பாலைகள் சனியன்று அறிவித்துள்ளன.  அதன்படி கிலோவுக்கு 10 ஆம் நம்பர் கோம்டு நூல் ரூ.175 க்கும், 16 ஆம் நம்பர் ரூ.185க்கும், 20 ஆம் நம்பர் கோம்டு நூல்  ரூ.243, 24ஆம் நம்பர் ரூ.255க்கும், 30 ஆம் நம்பர் ரூ.265க்கும்,  34 ஆம் நம்பர் ரூ.283, 40க்கும் நம்பர் ரூ.303, 20 ஆம் நம்பர் செமி  கோம்டு ரூ.240க்கும், 24 ஆம் நம்பர் ரூ.250க்கும், 30 ஆம் நம்பர்  ரூ.260க்கும், 34 ஆம் நம்பர் ரூ.273க்கும், 40 ஆம் நம்பர் ரூ.293  க்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.