ஆய்வுக் கூட்டம்
கோவை, நவ.27- பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை விழிப்புணர்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் ஆண்டு தொழில் ஆய்வு திட்டம் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மத்திய புள்ளிகள் அலுவலகம் கோவை மண்டலம் சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் இணை இயக் குனர் விநீஷ் தலைமை வகித்தார்.
இதில், ஆண்டு தொழில் ஆய்வு கணக்கீடு மற்றும் விவரங்கள் வழங்குவதில் பின் பற்ற வேண்டிய விதிகள் மற்றும் செயல்முறைகள் குறித்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலு வலர்களுக்கு விளக்கப்ப்பட்டது. இக்கூட்டத்தில் கோவை மண்டல புள்ளியியல் இணை இயக்குனர் ஷெரினா, துணை இயக்குனர் அமுதவல்லி உட்பட கோவை, திருப்பூர், நாமக் கல், ஈரோடு, நீலகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர் கள் கலந்து கொண்டனர். இவர்களிடமிருந்து பெறப்படும் தரவுகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு எவ் விதத்தில் உதவியாக இருக்கும் என்பது குறித்து ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.
லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
சேலம், நவ.27-ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெரிய கவுண்டம்பாளை யம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர், ஓடைப் பகுதி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தார். ஆக்கிரமிப்பை அகற்ற யோகேஸ் வரனிடம் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக், தனது உதவியாளர் முருகன் மணியின் மூலம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது அங்கு வந்த சேலம் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நவ.27- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வூதியர் கள் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குப்புசாமி, துணைத்தலைவர்கள் சையத் முஸ்தபா, ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.