தருமபுரி, அக்.22- இலக்கியம்பட்டி அருகே வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அனு பவ நிலங்களை பறிக்கும் வருவாய்த் துறையின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது வி.ஜெட்டிஅள்ளி கிராமம், தருமபுரி நகரத்தையொட்டி உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த லட்சுமி (எ) ராஜலட்சுமிக்கு சொந்த மாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் வெளியூர் சென்றுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகால மாக 18 குடும்பங்கள் அந்த நிலத்தின் ஒரு பகுதியில் ஆடு, மாடு வளர்க்க கொட் டகை அமைத்தும் மரங்களை வளர்த்து வந்தனர். சிலர் அங்கேயே குடியிருந் தும் வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆர்ஜிதம் செய்துள்ளது. மேலும், பெரும் முதலாளிகளின் பணத்தை பெற்றுக் கொண்டு சில அதிகாரிகள் துணையு டன் அந்த இடத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு மனைப்பட்டா வழங்கப் பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர். இந்நிலத்தின் ஒரு பகுதியை, வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50 ஆண்டுகாலமாக அனுப வித்து வருகின்றனர். இப்பகுதி மக்க ளுக்கு மனைப்பட்டா வழங்காமல், அந்த நிலத்திலிருந்து வருவாய்த்துறை அலு வலர்களும், காவல்துறை அதிகாரி களும் சேர்ந்து அம்மக்களை வெளி யேற்றினர். இதை எதிர்த்தவர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீசார் அடித்து வெளியேற்றினர். அனுபவ நிலத்தில் இருந்து வரும் அதே பகுதி மக்களுக்கு அனுபவ நிலங் களுக்கான பட்டா வழங்க வேண்டும். அனுபவத்தில் இருந்துவரும் அப்பகுதி மக்களின் நிலத்தை மீண்டும் அப்பகுதி மக்களுக்கே வழங்க வேண்டும் என தருமபுரி நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு, விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், சனியன்று காவல் துறையினரை வைத்து மீதமுள்ள நிலத் தில் அமைக்கப்பட்டிருந்த ஆடு, மாடு கொட்டகையை பிரித்து அராஜகம் செய்துள்ளனர். மேலும், அங்கு பயிரி டப்பட்ட தீவனப்பயிர்களும் அழிக்கப் பட்டன. வழக்கு நடக்கும் போது பிரச் சனை செய்யக்கூடாது என அம்மக்கள் வாதிட்டும், செவி சாய்க்காமல், காவல் துறையினரை வைத்து வருவாய்த் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தருமபுரி ஒன்றியக்குழு கடும் கண் டனம் தெரிவித்துள்ளது.