districts

img

நிலுவையிலுள்ள அகவிலைப்படியை உயர்த்திடுக போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கை

கோவை, டிச.28– 2016 ஆம் ஆண்டில் இருந்து நிலுவை யில் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி 76  மாதங்களுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல  அமைப்பினர் தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாயிலாக கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட் சியரிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் ஜி.பழனிச்சாமி, பொதுச்செயலாளர் பி.செல்வராசன், பொருளாளர் எம்.கிருஷ் ணராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.சேதுரா மன், சி.பழனிச்சாமி ஆகியோர் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத் துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதி யமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் தர வேண்டும். தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் ஓய் வூதியர்களுக்கான நிதியை ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டி ருந்தது.