சேலம், நவ. 10- நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள போக்குவரத்து ஓய்வூதியர்களின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற வர்களுக்கு கடந்த, 96 மாதங்களாக பாக்கியாக வைத்துள்ள டி.ஏ-வை தாமதம் இன்றி வழங்க வேண்டும். அரசு போக்குவ ரத்து கழகத்தில் ஓய்வு பெறுவோருக்கு உடனடியாக ஓய்வூ திய பலன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டலத் தலைவர் பி.என்.பழனிவேலு தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், சேலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் எம். பரமசிவம் தலைமை வகித்தார். ஓய்வூதிய சங்க மாவட்டத் தலைவர் அருள்மொழி, மாநில உதவி தலைவர் த.மணிமுடி, சி.பி.வாசன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
ஈரோடு
அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் என்.முருகையா, ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். தருமபுரி தருமபுரி மாவட்டம், பாரதிபுரம் போக்குவரத்து பனிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரூர் வட்ட செயலா ளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி, மாவட்ட செயலாளர் எம்.முனுசாமி, மாவட்டத் துணைத்தலைவர் வி.கணபதி, மாவட்ட துணைச் செயலாளர் கே.காவேரி, பொருளாளர் என்.குணசேகரன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாரா புரம் கிளைத் தலைவர் கே.வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், என்.செங்குட்டுவன், பி.பொன்னுசாமி மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் பேசினர். இறுதியாக மாநில இணைச் செயலாளர் எம்.நடராஜன் சிறப் புரை ஆற்றினார். இதில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.