districts

img

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஏப்.17- பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிற தேர்தல் கால வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற  வலியுறுத்தி, நாமக்கல்மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலசங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  நாமக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர்கள் நல சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் திங்க ளன்று நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பெ.க.கருப்பண்ணன் தலைமை தாங்கினார்.  இதில், ஒன்றிய அரசு அதே நாளில் மாநில ஓய்வூதியத் துகளுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்,  குடும்ப நல நிதியை ரூ 2 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், காசு  இல்லா மருத்துவம் என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.எஸ். குணசேகர் பங்கேற்று உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இளங்கோவன் மற்றும் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், ராமசாமி, காளியப்பன், குப்பு சாமி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.