கோவை, மே 10- குடும்ப ஓய்வூதிய நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வூ தியர் சங்கங்களின் மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில பொதுத்துறை ஓய் வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோவை மாவட்ட 3 ஆவது மாநாடு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் உள்ள தாமஸ் கிளப்பில் செவ்வாயன்று நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு ரையாற்றினார். இதில், ஒருங்கிணைப் புக்குழு நிர்வாகிகள் சுரேந்திரன், பால கிருஷ்ணன், மதன், குடியரசு, ஞான பிரகாசம், சுப்ரமணியன், அரங்கநா தன், கருணாநிதி, வெங்கட்ராமன், மாணிக்கம், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், காப்பீட்டு திட்டத் தின்படி கொரோனா உள்ளிட்ட நோய் களுக்கு சிகிச்சை பெற்ற ஓய்வூதியர் களுக்கு காப்பீட்டு தொகையை நிபந் தனையின்றி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ஒரு லட் சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண் டும். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து ஓய்வூதியர் சங் கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட தலைவராக சின்னசாமி, துணைத்தலைவர்களாக கருணாநிதி, சுரேந்திரன், வேலுசாமி, செயலாள ராக அரங்கநாதன், இணைச்செயலா ளர்களாக ஞானபிரகாசம், சிவராசு, மாணிக்கம் மற்றும் பொருளாளராக புவியரசு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.