நாமக்கல், மே 29- பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுபடுத்த வேண் டும் என சிஐடியு ஆட்டோ தொழிலா ளர்கள் சங்க நாமக்கல் மாவட்ட மகா சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கம் சிஐடியு சங்க 5 ஆவது மகாசபை கூட்டம் நாமக்கலில் ஞாயி றன்று நடைபெற்றது. மாவட்ட தலை வர் ஏ.தண்டபாணி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர் பி.பொன்னுசாமி வர வேற்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன் துவக்கி வைத்தார். வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் க.ஜெயராம் சமர்பித்தார். புதிய நிர் வாகிகளை அறிமுகபடுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி நிறைவுறையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் சு.சுரேஷ், தலைவர் பி.பழனி வேல் ஆகியோர் வாழ்த்தி பேசினார் கள்.
தீர்மானங்கள்
இன்சூரன்ஸ் கட்டணம் அபராதத் தொகை நாளொன்றுக்கு 50 ரூபாய் வசூல் செய்வதை கைவிட வேண்டும். வாகன ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தனி யார் மூலம் அதிக பணம் வசூல் செய் வதை தடுத்து நிறுத்திட வேண்டும். ஆன்லைன் மூலம் அபராத தொகை விதிப்பதை கைவிட வேண்டும். ஆண் டாண்டுக்கு இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். 50 சதவீத மானிய விலையில் ஆட்டோக்களுக்கு டீசல் விலைகளை குறைத்து வழங்கிட வேண்டும். நலவாரியத்தில் உள்ள ஓய்வூதிய தொகையை ரூ.3 ஆயிர மாக உயர்த்தி வழங்கி, நலவாரிய பணபயன்களை இரட்டிப்பாக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மகாசபை கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்த மகாசபை கூட்டத்தில் சங்கத் தின் புதிய மாவட்ட தலைவராக பி.பொன்னுசாமி, மாவட்ட செயலாள ராக ஏ.தண்டபானி, மாவட்ட பொரு ளாளராக ஜீ.ஜெயராம், துணை தலைவராக கே.மோகன், துணை செய லாளர்கள் ஜெபி.கெளஸ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் 9 பேர் உட்பட 15 கொண்ட புதிய மாவட்ட கமிட்டி தேர்வு செய்யபட்டது.