நாமக்கல், டிச.28- பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என விவசாய தொழி லாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 8ஆவது மாநாடு செவ் வாயன்று நாமக்கல் கண்ணன் மகா லில் நடைபெற்றது. சங்க கொடியை சங்கத்தின் மாநிலக் குழு உறுப் பினர் எஸ்.சம்பூர்ணம் ஏற்றி வைத்தார். இதையடுத்து அலுவல கத்தில் இருந்து மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றனர். மாநாட் டிற்கு சி.துரைசாமி தலைமை வகித்தார். சி.என்.முருகேசன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொ ழிந்தார். மாவட்ட துணைத் தலைவர் பி.செல்வராஜ் வரவேற்புரை ஆற்றி னார். மாநிலச் செயலாளர் ஏ.பழனிச் சாமி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வி.பி.சபாபதி வேலை அறிக்கை சமர்ப்பித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, இந்திய தொழிற்சங்க மையத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் எம். அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதையடுதது, விவசாய தொழி லாளர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். நிலமற்றவர் களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தில் பய னாளிகளிடம் பங்குத்தொகை என்ற பெயரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வாங்குவதை ரத்து செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்க-ளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவராக சி.துரை சாமி, செயலாளராக வி.பி.சபாபதி, பொருளாளராக பி.செல்வராஜ், துணைத்தலைவர்களாக பாண்டி, சம்பூரணம், துணைச்செயலாளர் களாக ஆர்.குருசாமி, சி.செல்லம் உட்பட 21 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டது. மாநில செயலாளர் சேலம் ஜி.கணபதி நிறைவுரை யாற்றினார்.