districts

img

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியர் சங்கம் தீர்மானம்

அவிநாசி, டிச.28 - தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டம் அவிநா சியில் மாநிலத் தலைவர் திருமலைவாசன் தலைமை யில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்டச் செயலா ளர் கருப்புச்சாமி  மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், மாநில  செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட துணைத்த லைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ,கிராம உதவியாளர்களுக்கு வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், கருணை  அடிப்படையில் வாரிசுக்கு வேலை, பழைய ஓய்வூதியத் திட் டம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக்கோரிக்கை களை  வலியுறுத்தி ஜன. 23ஆம் தேதி மாலை அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, பிப்.5  ஆம் தேதி மாலை 3 மணி முதல் காத்திருப்பு போராட்டம் நடத் துவது, பிப்.27 ஆம் தேதி அனைத்து தாலுகா அலுவல கத்திலும் சிறு விடுப்பு எடுத்து அரசுக்கு தெரிவிப்பது என்றும்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாநிலப் பொருளாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.