நாமக்கல், நவ. 20- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் பகுதி குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது . சங்க நிர்வாகி கே.சரவணன் கூட்டத் திற்கு தலைமை தாங்கினார். சங்க மாவட்டக் குழு செயலாளர் எம்.அசோகன், சங்க நிர்வா கிகள் கே.பாலுசாமி, வெங்கடேசன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்,மக்கள் விரோத போக்குடன் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து நவம்பர் 26,27,28 ஆகிய தேதிகளில், சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற உள்ள போராட்டத்திலும், நாமக்கல் தலைநகரத்தில் நடைபெறும் போராட்டத்திலும் திரளானோர் பங்கேற் பது எனவும், குமாரபாளையம் விசைத் தறி தொழிலாளர்களுக்கு 2023, 2024 ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் 20% சதவிகிதம் கேட்பது. 10.12.2023 அன்று போனஸ் குறித்த சிறப்பு பேரவை கூட்டம் நடத்துவது விசைத்தறி உரி மையாளர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு போனஸ் பேச்சுவார்த் தைக்கு கடிதம் அனுப்புவது. குமாரபா ளையம் பகுதியில் அரசு மதுபான கடை கள் மூடிய பின்பு, கூடுதல் விலைக்கு மது விற்பது, ஒரு எண் லாட்டரி ,கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற் கப்படுவதால், விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத செயலை கண் காணித்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். சாயப்பட்டறை கழிவு நீர் நேர டியாக ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்தி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க கோரி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், திர ளான விசைத்தறி தொழிலாளர்கள் பங் கேற்றனர்.