தாராபுரம், ஜன.4- சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர் களிடம் வழங்க வேண்டுமென மூலனூரில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் மூலனூர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை தலைவர் ஆர்.நிர்மலா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் டி.மாசிலா மணி, எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித் தனர். ஒன்றிய துணைத் தலைவர் டி.ராஜ லட்சுமி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பி.செல்வி கோரிக்கைளை விளக்கி பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் மேக லிங்கம், வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். விஜயலட்சுமி, மாவட்ட செய லாளர் எஸ்.முருகேசன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, மாவட்ட இணைச் செயலாளர் ஜெயந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர் களுக்கு முதல்வரின் தேர்தல் கால வாக்கு றுதியான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு ஊழியர்கள் பொறுப்பில் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலை வாசி உயர்வுக்கேற்ப உணவூட்டுச் செலவின தொகையை ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. முடிவில் ஒன்றிய இணைச் செயலாளர் கே.விஜயராணி நன்றி கூறினார்.