உடுமலை, செப்.22- உடுமலை ரயில் நிலை யத்தை மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை நகரக்குழு மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு வின் 24 ஆவது மாநாடு, ஞாயி றன்று உடுமலை அமுதாராணி திருமண மஹாலில், தோழர் சீத்தாராம் யெச்சூரி நினை வரங்கில், நகரக்குழு உறுப்பினர் வி.விஸ்வ நாதன் தலைமையில் நடைபெற்றது. நகரக் குழு உறுப்பினர் எஸ்.வசந்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் எஸ். நடராஜ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை தோழன் ராசா முன்வைத்தார். கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். நகரக்குழுச் செயலாளர் கே.தண்டபாணி அறிக்கையை முன்வைத் தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பினர் எ.பஞ்சலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், உடுமலை அரசு மருந்து வமனைக்கு எதிரில் நகராட்சி நிர்வாகத் திற்கு சொந்தமான சுமார் 96 சென்ட் இடத்தை, மனமகிழ் மன் றம் என்ற பெயரில் வசதி படைத் தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை அகற்றி, அந்த இடத் தில் அரசு மருத்துவமனையின் விரிவாக்க வேலைகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். நகராட்சி பகுதியில் இருக்கும் அண்ணா பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழி யால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகை யில், சாலைகளை பராமரிக்க வேண்டும். மத் திய பேருந்து நிலையத்தில் பொது கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். தாராபுரம் சாலை யில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஏழை மக்களுக்கு பயன்படும் வகை யில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் உடுமலை நகரக்குழுச் செயலாளராக கே.தண்டபாணி மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் நிறைவுரையாற்றினார்.