நாமக்கல், செப்.30- பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட் சியின் குமாரபாளையம் நகரக் குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர8 ஆவது மாநாடு, ராசி மஹாலில் தோழர் கே.நாராய ணன் நினைவரங்கில் ஞாயிறன்று நடை பெற்றது. நகரக்குழு உறுப்பினர் எஸ்.கந்த சாமி செங்கொடியை ஏற்றி வைத்தார்.கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். நகரச் செயலாளர் சக்திவேல் அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், கணேஷ் பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், குமாரபாளையம் நகராட்சியில் தூய்மைப் பணி யாளர்கள் பெரும்பாலான பகு திகளில் குப்பைகளை அள்ளுவ தில்லை. எனவே, அனைத்து பகுதியிலும் குப்பைகள் தின மும் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரசுமருத்து வமனையில் போதிய தூய் மைப் பணியாளர்களை நிய மிக்க வேண்டும். நகரின் பல இடங்க ளில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக் கல் நாட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி விரைந்து அதற் கான பணிகளை துவங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் நகரச் செய லாளராக எஸ்.கந்தசாமி மற்றும் 9 நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி நிறைவுரையாற்றினார்.