districts

img

கோத்தகிரியில் வாகன நிறுத்தமிடம் அமைத்திடுக

உதகை, செப்.30- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோத்தகிரியில் வாகன நிறுத்தமிடம் அமைக்க வேண்டும் என சிபிஎம் தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி தாலுகா 9  ஆவது மாநாடு ஞாயிறன்று, கோத்தகிரி எடச்சேரி ஹாலில், தோழர் கே.ராஜேந்திரன் நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. செங்கொடியை தங்கவேல் ஏற்றி வைத்தார். இடைக்குழு உறுப்பினர் யோகராஜ் வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை ரஞ்சித் முன் வைத்தார். கட்சியின் நீலகிரி மாவட்டச் செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். தாலுகாச் செய லாளர் வி.மணிகண்டன் அறிக்கையை முன் வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எல்.சங்கரலிங்கம், கே.சுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினர் கே.மகேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், கோத்தகிரி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். சுற்றுலாத் தலமான கோத்தகிரியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன நிறுத்துமிட வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் தாலுகாச் செயலாளராக வி.மணிகண்டன் மற்றும் 9 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வினோத் நிறைவுரையாற்றினார். கே.மணிவண்ணன் நன்றி கூறினார்.