கோவை, ஜூன் 5- மழை வந்தால் வெள்ளம் குடியி ருப்புக்குள் சூழ்ந்து விடும் என அன்னூர் மக்கள் தொடர்ந்து மா வட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்தியதன் காரண மாக பொதுமக்கள் தற்போது பெரும் அவதிக்குள்ளாகி உள்ள னர்.
கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த இரண்டு நாட்க ளாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அன்னூர் கோவன் குளம் முழு கொள்ள வையெட்டி உபரி நீர் வெளி யேறி வருகிறது. உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலை யில், மழைநீர் தாழ்வான பகுதி களில் தேங்கியுள்ளது. குறிப்பாக, அன்னூர் புவனேஸ்வரி நகர் மற் றும் பழனி கிருஷ்ணா நகர் அவென்யூ உள்ளிட்ட குடியிருப்பு களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒவ் வொரு முறையும் குளம் நிரம்பும் போதெல்லாம் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம் சாட் டும் இப்பகுதி பொது மக்கள் கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளி யேற வழியில்லாமல் போன தாகவும், இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபா யம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்த னர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண் டு சென்றும் உரிய நடவடிக்கை மேற் கொள்ளாததே தற்போதைய அவ திக்கு காரணம் என இப்பகுதி மக் கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பி ரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும், இல்லை யென்றால் ஆட்சியர் அலுவல கத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்துவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என எச்சரித்துள் ளனர்.