நாமக்கல், ஏப்.11- ஆயில்பட்டி கிராமத்தில் 90 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயிலை தீயனைப்புத்துறையினர் உயிரு டன் மீட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விஐபி சிட்டி, கந்தன் பூசாரி தோட்டம் பகுதியில் ராமன் என்பவருக்கு சொந்தமான, சுமார் 90 அடி கிணற்றில், ஆண் மயில் ஒன்று தவறி விழுந்தது. உயிருக்கு போராடுவதாக ராசிபுரம் தீய ணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரனுக்கு அப்பகுதி ஊர் பொது மக்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி, கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆண் மயிலை உயிருடன் பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரி ராஜ் குமாரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் ஆண் மயிலை பத்திரமாக விட்டனர்.