districts

img

டிபிசி ஊழியர்களுக்கு ரூ.554 வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், டிச.5- டிபிசி ஊழியர்களுக்கு ரூ.554 ஊதியமாக வழக்க ஆட்சியர் உத்தரவிட்டும், காங்கேயத்தில் ரூ.320 மட் டுமே வழங்கப்படுகிறது எனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் சிஐடியு உள் ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று மனு அளித் துள்ளனர்.  சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, காங்கேயம் நகராட்சியில் 24  டிபிசி( டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்) பல வருடங்க ளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குத் தினசரி  ஊதியமாக ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்பொழுது  மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி டெக்கு கொசு ஒழிப்பு  பணியாளர்களுக்கு ரூ.554 தினசரி ஊதியமாக அறிவிக்கப் பட்டு, ஊரக பகுதிகளில் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் ரூ.554 வழங்கப் படுகிறது. ஆனால் காங்கேயம் பகுதியில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் ரூ.320 மட்டுமே பெற்றுக்கொண்டு தங்கல்  வாழ்வாதாரத்தை நடத்த சிரமப்படுகின்றனர். எனவே காங்கே யத்தில் வேலை செய்யும் டிபிசி ஊழியர்களுக்கு ஆட்சியர்  உத்தரவிட்ட ஊதியத்தை வழக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறப்பட்டுள்ளது.